Idhayam Matrimony

டித்வா புயல் எதிரொலி: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் சேவை ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2025      தமிழகம்
Air 2025-11-20

Source: provided

சென்னை : டித்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் 47 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. 

டித்வா புயல் நேற்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் ஹைதராபாத் பெங்களூர் இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 27 புறப்பாடு விமானங்கள், 27 வருகை விமானங்கள் என மொத்தம் 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் 24 புறப்பாடு விமானங்கள், 23 வருகை விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், விமான பயணிகள் அனைவரும், தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் விமானங்கள் புறப்படும், வரும் நேரங்கள் போன்றவைகளை கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல், தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து