எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தஞ்சை : ஆசிரியை கொலை வழக்கில் கைதான பெயிண்டர் சிறையில் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். வரை படித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வந்த காவியா தற்போது தனது ஊரின் அருகே உள்ள ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினமும் இவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.அதே ஊரை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டரான அஜித்குமாரும், காவியாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். காவ்யா, அஜித்குமாரை காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் காவ்யாவை அவரது பெற்றோர், தங்களது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 23-ந்தேதி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.இந்த விவரத்தை காவியா தனது காதலன் அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இரவு 8 மணிக்கு காவியாவும், அவரது காதலன் அஜித்குமாரும் செல்போனில் வீடியோ காலில் பேசியுள்ளனர்.அப்போது அஜித்குமாரிடம், நமது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் எனக்கு எனது உறவினருடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என காவியா தெரிவித்துள்ளார். அத்துடன் நிச்சயதார்த்த போட்டோக்களையும் அஜித்குமாருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். அதைக்கேட்டதும் அஜித்குமார் அதிர்ச்சியில் உறைந்தார். தான் உயிருக்கு உயிராக காதலித்தவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் இருப்பதை எண்ணி, எண்ணி அவர் கடும் ஆத்திரம் அடைந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு முழுவதும் அவருக்கு தூக்கமே வரவில்லை.
இந்த நிலையில் 17-ம் தேதி காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் சென்றார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவின் ஸ்கூட்டரை அஜித்குமார் வழிமறித்துள்ளார். பின்னர் உனக்கு உனது உறவினருடன் நிச்சயதார்த்தம் ஆனதை ஏன் என்னிடம் கூறவில்லை எனக்கேட்டு காவியாவிடம், அஜித்குமார் தகராறு செய்துள்ளார்.
என்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் உனக்கு திருமணம் நடக்கப்போகிறதா?. நான் இல்லாமல் வேறு ஒருவருடன் நீ வாழ்ந்து விடுவாயா? எனக்கேட்டு காவியாவிடம், அஜித்குமார் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஜித்குமார், எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக்கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். பின்னர் அஜித்குமார் நேராக அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இந்தநிலையில், பள்ளி ஆசிரியையை படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை சேர்ந்த அஜித்குமார் என்ற கைதி திடீரென தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2025.
02 Dec 2025 -
கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்
02 Dec 2025இயக்குனர் கணேஷ் கே.பாபுவின் முதல் தயாரிப்பான புதிய படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குநர்கள் H.
-
BP180 திரை விமர்சனம்
02 Dec 2025வட சென்னை பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரன், தன் வேலையில் நேர்மையாக ஒரு விசயத்தை செய்கிறார்.
-
வெள்ளகுதிர திரை விமர்சனம்
02 Dec 2025சாலை வசதியே இல்லாத உறவினர் வீட்டில் தங்கும் நாயகன் ஹரிஷ் ஓரி அங்கு கிடைக்கும் ஒருவித போதை பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
-
ரஜினி கேங்க் திரை விமர்சனம்
02 Dec 2025நாயகன் ரஜினி கிஷனும், நாயகி திவிகாவும் ஊரை விட்டு ஓடிப்போகும் போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.
-
யாரு போட்ட கோடு இசை வெளியீட்டு விழா
02 Dec 2025டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை இயக்கத்தில், பிரபாகரன் மற்றும் மேஹாலி மீனாட்சி நடித்திருக்கும் திரைப்படம் ‘யார
-
‘டித்வா’ புயலால் காரணமாக இலங்கையில்14 லட்சம் பேர் பாதிப்பு
02 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் இலங்கையில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
பசுபதி நடிக்கும் குற்றம் புரிந்தவன்
02 Dec 2025Sony LIV தமிழ் ஒரிஜினல் தொடர் குற்றம் புரிந்தவன். தி கில்டி ஒன். டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங்குக்கு வர உள்ள இந்த தொடரில் முக்கிய பாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.
-
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் அஜித் சாமி தரிசனம்
02 Dec 2025கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
-
சென்னை, தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ. 39 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Dec 2025சென்னை, சென்னை தண்டையார்பேட்டையில் பல்வேறு வசதிகளுடன் அரசு அச்சகப்பணியாளர்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
02 Dec 2025சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'சஞ்சார் சாத்தி' செயலியை பதிவு செய்வது கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்
02 Dec 2025புதுடெல்லி, அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை பதிவு செய்வது கட்டாயமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
02 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்து விற்பனையானது.
-
செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது அரசு
02 Dec 2025சென்னை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
-
முறையான காரணம் இன்றி பொதுநல வழக்கை திரும்பபெற அனுமதி கோரினால் அபராதம் ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கை
02 Dec 2025மதுரை, பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
-
தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம்: கி.வீரமணிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
02 Dec 2025சென்னை, தொடரட்டும் ஆசிரியரின் தொண்டறம் என்று கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டைவிட்டு தப்பிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ.58,000 கோடி இழப்பு: மத்திய அரசு
02 Dec 2025புதுடெல்லி, நாட்டைவிட்டு தப்பியோடிய 15 பொருளாதார குற்றவாளிகளால் ரூ. 58,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
02 Dec 2025சென்னை : மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
02 Dec 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திக்கிறது காங், குழு
02 Dec 2025சென்னை : வரும் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு இன்று சந்திக்கிறது.
-
சென்னை மழை பாதிப்பு குறித்து களத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
02 Dec 2025சென்னை : கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்ய வேண்டும் : சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
02 Dec 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
இன்று மகா தீபத்தை முன்னிட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது 300 கிலோ எடை கொண்ட கொப்பரை
02 Dec 2025திருவண்ணாமலை : சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் காா்த்திகை தீபத்தன்று இன்று மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில் மகா தீப
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன்
02 Dec 2025சென்னை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
-
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் : துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
02 Dec 2025சென்னை : மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


