எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் நேற்று வக்கீல் அருணாசலம் என்பவர் முறையிட்டார்.
அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். ஆனாலும் அவர் தன் மனுக்களை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வக்கீல் அருணாசலத்தை கோர்ட்டில் இருந்து வெளியேற்றுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், நீதிபதிகள், இந்த வழக்கில் தேவையான மனுதாரர்கள் இணைந்து விட்டனர். தனி நீதிபதியிடம் இருந்த வழக்கு விசாரணையின் போது யாரெல்லாம் இணை மனுதாரராக இணைந்தார்களோ அவர்களை மட்டுமே மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்க முடியும்.
இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அனைவரையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். அதை மீறி இவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


