எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் சுமார் 1,400 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் முன்மொழிந்த 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை, நீண்ட இழுபறிக்குப்பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம். உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திக்க உள்ளேன். புத்தாண்டுக்கு முன் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என்று தெரிவித்திருந்தார்.
டிரம்ப், ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் நேற்று அதிகாலை ரஷ்ய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 16 வயது சிறுமி உள்பட மொத்தம் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


