எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த 2009-2018 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்த நஜீப் ரசாக், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்காக 1எம்.டி.பி. என்ற அமைப்பை உருவாக்கினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நன்கொடை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை பெற்று நஜீப் ரசாக் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டு விசாரணையில் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கிலும் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கோர்ட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


