எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
3-வது கண்காட்சி...
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(டிச.27) தொடங்கி வைத்து பேசினார். விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில், நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த வேளாண் கண்காட்சி, இந்த ஒரு ஆண்டில் மட்டும் எத்தனையாவது கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? மூன்றாவது கண்காட்சி.
விவசாயிகள் அலைய...
இன்றைக்கு, தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பல மணி நேர வேலைகளை, சில மணித்துளிகளில், பல நூறு நபர்கள் செய்கின்ற வேலைகளை, சில இயந்திரங்கள் செய்கின்ற அளவுக்கு, அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது! இந்த வளர்ச்சி, விவசாயிகளான உங்கள் கைகளில் வந்து சேர்ந்தால்தான், அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படி இருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி, விவசாயிகளான நீங்கள் அலையக் கூடாது என்று தான், உங்களைத் தேடி வந்து இந்த வேளாண் கண்காட்சிகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கலந்துரையாடல்...
சரி, கண்காட்சி வைத்துவிட்டால் மட்டும் போதுமா. இதையெல்லாம் எளிமையாக புரிவது போன்று விளக்கி சொல்லி, இதையெல்லாம் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான், 13 தலைப்புகளில், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கருத்தரங்குகள் மூலமாக, புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அரசியல் செய்வார்கள்...
எதற்காக இத்தனையும் நாம் செய்கிறோம்? விவசாயத்தை நிலைபெற செய்யவேண்டும் என்பதற்காக செய்கிறோம். வேளாண் துறையும், உழவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளை களைந்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். நாம் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனே, வேளாண்மைத்துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றினோம். சிலர், பெயரை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்றுவார்கள்… ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராடவிடுவார்கள்… இன்னும் சிலர், விவசாயி வேடமிட்டு, அரசியல் செய்வார்கள்
குறுவை சிறப்பு தொகுப்பு...
கடந்த 5 ஆண்டுகளாக, மேட்டூர் அணையை, சரியான நேரத்தில் திறக்கிறோம். அதனுடைய 20 லட்சம் விவசாயிகள் பயனடைகின்ற வகையில், ரூ.481 கோடி செலவில், ‘குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்’ கொண்டு வந்திருக்கிறோம்! இந்த ஆண்டு, முதன்முறையாக, டெல்டா அல்லாத மாவட்டங்களில், கார் - குறுவை - சொர்ணவாரிப் பருவங்களில் நெல் சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை ரூ.132 கோடியில் செயல்படுத்தியிருக்கிறோம்.
வேளாண் வளர்ச்சி திட்டம்...
கிராமங்களில், உழவுத் தொழிலை வலுப்படுத்த வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து, ஐந்தாண்டு பெருந்திட்டமாக கொண்டு வந்ததுதான், “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்!” 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகின்ற இந்த திட்டத்தால், 54 ஆயிரத்து 701 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
இலவச மின்சார இணைப்பு...
வேளாண் - உழவர் நலத்துறை சார்பில், செய்யப்பட்டிருக்கின்ற திட்டங்கள் பற்றியும், முன்னெடுப்புகள் பற்றியும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர் ஒரு பெரிய பட்டியலையே விளக்கமாக வழங்கிவிட்டார்… அதிலிருந்து சிறியதாக தான் நான் இப்போது சொல்லியிருக்கிறேன்! அதில், முத்தாய்பான ஒரு விஷயம், இந்த 5 ஆண்டுகளில் புதிதாக, 1 லட்சத்து 82 ஆயிரம் புதிய இலவச மின்சார இணைப்புகளை வழங்கி, கூடுதலாக, 3.6 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
32.81 லட்சம் ஏக்கரில்...
உங்கள் விளைச்சலில் மட்டுமல்ல, உங்கள் துன்பத்திலும் துணையாக கூட நிற்பவர்கள் தான் நாங்கள். அதனால்தான், ஐந்தாண்டுகளில், இதுவரைக்கும் 32.81 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சேதத்திற்கு, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து ரூ.31 கோடியே 76 லட்சம் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம். முக்கியமாக, 2024-2025-ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக, ரூ.289 கோடியே 63 லட்சத்தை, 3 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று 23-ம் தேதி நான் உத்தரவிட்டு தான், இந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அத்துடன், இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்கு துணையாக...
இப்படி, உழவர் பெருமக்களின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உங்களின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் என்றைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, உங்களுக்குத் துணையாக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வழங்காமல் நான் போகமுடியுமா? முடியாது. நீங்களே நினைப்பீர்கள், அரசு விழாவில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அரசு விழாவில் அறிவிப்பு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், விவசாயிகளின் கண்காட்சியை, இங்கே மாநாடு போல, மாபெரும் விழாவாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.



