எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு கிராமத்தில் அரசின் கழிவுகள் கொட்டும் தளம் உள்ள பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 200 வீடுகள் சமீபத்தில் இடிக்கப்பட்டன. அந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது வீடற்ற நிலையில் உள்ளனர். இதனை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. மேலும், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியாகவும் மாறியுள்ளது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ பெங்களூருவின் கோகிலு கிராமத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் பேசினேன். இத்தகைய நடவடிக்கைகள் மனித பாதிப்புகளை மையமாகக் கொண்டு, மிகுந்த எச்சரிக்கை, உணர்திறன் மற்றும் கருணையுடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆழ்ந்த கவலையை அவர்களிடம் தெரிவித்தேன்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்களே நேரடியாகப் பேசி, குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பொருத்தமான வழிமுறையை ஏற்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்’ எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


