எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால் என்று திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
வளர்ச்சியை நோக்கி....
முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை வரவேற்க காத்திருக்கும் உங்களுக்கு இனிப்பான சர்க்கரைப் பொங்கலை போல அறிவிப்பை வழங்கிவிட்டுதான், இங்கு வந்திருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரையில், இது ‘ஐ.பி.’ மாவட்டம். திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ, அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக் காத்து, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நம்முடைய அமைச்சர் ஐ.பெரியசாமி.
10 ஆண்டு காலம்...
அதேபோல, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரின் துறையில், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய ஒரே ஒரு சாதனையைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில், 10 ஆண்டு காலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு 1 கோடியே 79 லட்சத்து 81 ஆயிரத்து 152 மெட்ரிக் டன். ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் வெறும் நான்கரை ஆண்டுகளில், 1 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 710 மெட்ரிக் டன் கொள்முதல் நாங்கள் செய்திருக்கிறோம். நன்றாக கவனியுங்கள் - அ.தி.மு.க.வின் பத்தாண்டுகளை விட நம்முடைய ஐந்தே வருடத்தில், 19 லட்சத்து 94 ஆயிரத்து 558 மெட்ரிக் டன் அதிகமாக நாம் கொள்முதல் செய்திருக்கிறோம். இது சாதாரணமானது அல்ல; மிகப் பெரிய சாதனை. இந்த சாதனைக்கு சொந்தக்காரர்தான் நம்முடைய சக்கரபாணி அவர்கள்.
பல்வேறு முடிவுற்ற....
இன்றைய விழாவை பொறுத்தவரைக்கும், 337 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு, ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன். மொத்தம், ஆயிரத்து 595 கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் விழாவாக இது அமைந்திருக்கிறது.
சமூக பாதுகாப்பு....
நீங்கள் எல்லோரும் செய்திகளில் பாத்திருப்பீர்கள். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்த நான் ஆணையிட்டிருக்கிறேன். அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல; அவர்கள் வாழ்க்கைத் துணையின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறுபடியும் நாம் உறுதி செய்திருக்கிறோம்.
ஆறரை லட்சம் பேர்....
இதன் மூலமாக, நிச்சயமற்ற எதிர்காலம் என்ற நிலையிலிருந்து நம்பிக்கை அளிக்கும் எதிர்காலத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். இப்போது அரசு ஊழியர்கள் கொடுக்கின்ற பேட்டிகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்ன சொல்கிறார்கள், “எங்கள் ஓய்வுகால வாழ்க்கையை முதல்வர் அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறார். இந்த அறிவிப்பு மூலம் ஆறரை லட்சம் பேர் வாழ்க்கையில் முதல்வர் ஒளியேற்றி வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.
3 ஆயிரம் ரூபாய்....
மற்றொரு பக்கம், நாட்டில் சாமானிய மக்கள் ஒருவர்கூட நிம்மதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் - இந்த திட்டத்தையெல்லாம் “செய்யவே முடியாது” என்று சொல்லிகொண்டு இருந்தார்கள். ஆனால், நாம் செய்து காட்டியிருக்கிறோம். அதேபோல், அடுத்த முக்கிய அறிவிப்பு, தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாட 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். அந்த ரொக்கம் மட்டுமல்ல, பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு வழங்கவும் ஆணையிட்டிருக்கிறேன்.
வேட்டி, சேலை...
அதுமட்டுமல்ல, பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுவரையில் எந்த வருடமும் இல்லாத வகையில் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாளை நான் சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கயிருக்கிறேன். அதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை என்று எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப் போகிறோம். வருகின்ற பொங்கல், உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல்.
மாணவர்களுக்கு....
இதுமட்டுமா. இரண்டு நாட்களுக்கு முன்பு, 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்கின்ற திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். அதன் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கிறோம். இதனால் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற அனைத்து படிப்புகள் சார்ந்த மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படுகிறது.உலகத் தரமான கம்பெனிகளின் லேப்டாப்-ஐ தான் நம்முடைய மாணவர்களின் கைகளில் நாம் வழங்கியிருக்கிறோம். “நீங்கள் நன்றாக படியுங்கள் - மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். உலகம் உங்கள் கையில்” என்று நான்அந்த நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறேன்.
997 திருக்கோவில்கள்....
நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 4 ஆயிரம் திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு அதாவது, அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம் இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பா.ஜ.க. மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதுமட்டுமல்ல, 997 திருக்கோவில்களுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 655 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசைப் பாராட்டுகிறார்கள்.
பக்தர்கள் விரும்பும்....
தலைமைச் செயலகத்தில் வாரத்தில் எப்படியாவது இரண்டு நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பணிகளை நான் தொடங்கி வைத்து அந்த விழாவில் பங்கேற்றேன். நம்முடைய ஆட்சியில், இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகதான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது, ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.
நடக்கவே நடக்காது...
இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை. அது இனியும் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம். இந்த ஸ்டாலின் இருக்கின்றவரை அது நடக்கவே நடக்காது. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு சிலர், இங்கு இப்படி பேசி, வடமாநிலங்களில் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என்பதுதான் அவர்களின் எண்ணம்.
அவரே கேட்டுவிட்டார்...
தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கிவிட்டார். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். “தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா... வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா அவர்கள் கேட்டிருக்கிறார்.
முடிவு செய்யும் தேர்தல்....
ஐயா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம். 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால் “அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தால், பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளும்” என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித்ஷா அவர்கள் நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்.
நம்முடைய பக்கம் தான்....
மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள். மறுபடியும் நாங்கள்தான் வருவோம். நல்லாட்சியைத் தொடர்வோம். எதிலும் நம்பர் ஒன், அனைத்துத் துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


