எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் படி தமிழகம் முழுவதும் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளநிலையில், நேற்றே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன்கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு வினியோகிக்கப்பட்ட வேட்டி-சேலைகளில் 80 சதவீதம் மட்டுமே மக்களால் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் நுகர்வு செய்யப்பட்ட வேட்டி-சேலைகளில் 100 சதவீதம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நுகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய வேட்டி-சேலைகள் குடோன்களில் இருப்பு இருப்பதாகவும் தேவைப்படும் ரேஷன் கடைகளுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதேபோன்று, முழு கரும்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 50 முதல் 80 சதவீதம் கரும்புகள் நகர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், கரும்பை பசுமையாக வழங்கும் நோக்கத்தில் இது போன்று வினியோகம் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து தேவையான அளவு கரும்புகள் மாவட்ட நிர்வாக குழுக்களால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு பசுமையாகவே வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.3 ஆயிரம் ரொக்கத் தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும், பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைவாழ் பகுதி மக்கள் அதிகாலையிலேயே வேலைக்கு கிளம்புவதால், மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. டோக்கன் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


