எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரூ, திருப்பதிக்கு இணைப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. 56 பஸ்கள் நிறுத்துவதற்கான வசதியும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேர் வரையில் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வசதிக்காக மலிவு விலை உணவகம், 2 தனியார் உணவகங்கள், போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் இடம், கலந்தாய்வு கூடம், கழிவுநீர் வெளியேற்று நிலையம், முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ் நிலையம் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
தி.மு.க. ஆட்சியில் எது செய்தாலும் அதில் குற்றம் காண்பது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வழக்கமாகிவிட்டது. மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ஆகியவற்றால் தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராக உள்ளது. எங்கேயாவது ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


