எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதை புள்ளி விவரங்களுடன் அவர் விவரித்துள்ளார்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது;- ”2019ஆம் ஆண்டு, இந்தோனேஷியா ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள், மேலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தலை நடத்தியது ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது. செலவுகளைக் குறைத்து நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, மனித உயிர்களின் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சுமார் 900 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5,000க்கும் மேற்பட்டோர் கடுமையாக உடல்நலக் குறைவு அடைந்தனர்.
2025 ஜூன் மாதத்தில், இந்தோனேஷிய அரசியலமைப்பு நீதிமன்றம் 2029 முதல் தேசிய மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தனித்தனியாக இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வாக்காளர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகள் மீது ஏற்பட்ட அதிகப்படியான சுமையும், ஜனநாயகப் பங்கேற்பில் ஏற்பட்ட பாதிப்பும் இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது.
இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவை ஆதரிப்பவர்கள், லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும், பாதுகாப்புப் படையினரின் நீண்டகால பணியமர்த்தலைத் தவிர்க்கலாம், தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறை காரணமாக ஏற்படும் நிர்வாகத் தடைகளைக் குறைக்கலாம், மேலும், அரசியல் கட்சிகள் நிரந்தரப் பிரச்சார நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம் என வாதிடுகின்றனர். எனினும், இந்தோனேஷியாவின் அனுபவம் ஒரு எச்சரிக்கை பாடமாகத் திகழ்கிறது.
ஒப்பீட்டு அரசியலமைப்பு நடைமுறைகளில், கட்டாயத் தேர்தல் ஒருங்கிணைப்பிற்குப் பெரிதாக ஆதரவு இல்லை. கனடாவில், கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் ஒருங்கிணைப்பு இயலாத ஒன்றாகும்: மாநில சட்டமன்றங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் நான்கு ஆண்டுகளாகும்; அதே நேரத்தில் கூட்டாட்சிப் பிரதிநிதிகள் சபையின் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
ஜெர்மனி பெரும்பாலும் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறது. அங்கு நிலவும் அரசியல் நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த தேர்தல்களால் அல்ல — லேண்டர் மாநிலத் தேர்தல்கள் திட்டமிட்டே வெவ்வேறு காலங்களில் நடைபெறுகின்றன — மாறாக ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற முறையால் உருவாகிறது. அதன்படி, சான்சலரை பதவியிலிருந்து நீக்குவதற்கு முன், புந்தெஸ்டாக் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்காவும் இந்தோனேஷியாவும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பயன்படுத்துகின்றன; இது அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கி, சிறுபான்மையினரின் குரலைப் பாதுகாக்கிறது. இந்தியாவின் ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி பெறும் முறைமைக்கு இத்தகைய பாதுகாப்புகள் இல்லை; தேசிய அளவிலான ஒரு அரசியல் அலை மாநிலத் தேர்தல்களையும் முழுமையாகத் தாக்கக்கூடும். அமெரிக்கா வழங்கும் ஒப்புமையும் பலவீனமானதே: அங்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் சுழற்சிகள் செயல்படுவதற்குக் காரணம், ஜனாதிபதி முறைமையில் நிர்வாகத்தின் பதவிக்காலம் சட்டமன்ற நம்பிக்கையிலிருந்து தனித்துவமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதுதான்.
இந்த யோசனைக்கான மிக விரிவான வரைமுறை, முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் (2023–24) செயல்பட்ட உயர்மட்டக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. இது தற்போது அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா, 2024 என்ற சட்ட வடிவில் முன்னேறி வருகிறது. முன்மொழியப்பட்டுள்ள சரத்து 82ஏ படி, லோக்சபா தேர்தல் சுழற்சியுடன் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலங்களையும் ஒத்திசைக்க ஜனாதிபதிக்கு ஒரு “நியமிக்கப்பட்ட தேதி” அறிவிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அந்தத் தேதிக்குப் பின்னர் உருவாகும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம், அவற்றின் ஐந்தாண்டு காலம் முடிவடையாதிருந்தாலும் குறைக்கப்படும்.
மேலும், இந்த மசோதா “எஞ்சிய பதவிக்காலத்திற்கான தேர்தல்” (unexpired-term elections) என்ற புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்துகிறது: ஒரு சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டால், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் முழு ஐந்து ஆண்டு காலம் அல்லாமல், முந்தைய காலத்தின் மீதமுள்ள பகுதியை மட்டும் நிறைவேற்றும். கூடுதலாக, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக
இருந்தால், மாநிலத் தேர்தல்களை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு 83,172 மற்றும் 327 (சரத்துகள் 83, 172 மற்றும் 327) ஆகியவற்றிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவை தீவிரமான அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புகின்றன.
இந்தியா திட்டமிட்டே ஒரு பாராளுமன்ற முறைமையைத் தேர்ந்தெடுத்தது; இதில் அரசாங்கம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்திருக்கும் வரை மட்டுமே பதவியில் நீடிக்கும். அரசியலமைப்பு சபையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜனநாயகம் ஒரே நேரத்தில் நிலைத்தன்மையையும் பொறுப்பையும் அதிகபட்சமாக உறுதிசெய்ய முடியாது என்று விளக்கினார். இந்தியா நிலைத்தன்மையை விட பொறுப்புணர்வைத் தேர்ந்தெடுத்தது — நிர்வாகத்தின் தொடர்ச்சியான பொறுப்புணர்வு, உறுதியான பதவிக்காலத்தை விட மேலாகக் கருதப்பட்டது.
இந்த முன்மொழிவின் மிகக் கவலைக்கிடமான அம்சம், சட்டமன்றத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டும் தேர்தலை நடத்துவது என்பதாகும். அரசியலமைப்பு “மீதமுள்ள ஆணை” என்ற கருத்தை அங்கீகரிப்பதில்லை. முன்மொழியப்பட்டுள்ள சரத்து 83(6) மற்றும் 172(5) புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அவை முந்தைய அவையின் தொடர்ச்சி அல்ல என்று கூறினாலும், தேர்தல் சுழற்சியை ஒருங்கிணைக்க முந்தைய கால அட்டவணையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
முதலில், இது வாக்குரிமையின் மதிப்பைக் குறைக்கிறது. நடுக்காலத் தேர்தல்கள் குறுகிய கால ஆணையைக் கொண்ட அரசுகளை உருவாக்கும்; தேர்தல்கள் இடைக்காலப் பயிற்சிகளாக மாறி, வாக்காளர்களின் அலட்சியத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றியம்-மாநில உறவுகள் குறித்த நீதிபதி குரியன் ஜோசப் குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியில் (பிப்ரவரி 2026) இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது — இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசும் ஏற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்மொழிவால் வாக்குறுதி அளிக்கப்படும் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை; ஆனால், அதன் கட்டமைப்பு பாதிப்புகள் ஆழமானவை. இது அரசியலமைப்பின் அடையாளத்தையே மாற்றி, அடிப்படை அமைப்புக் கொள்கையை மீறுகிறது. இந்தியா இந்தோனேஷியாவின் தவறை மீண்டும் செய்யக்கூடாது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.


