எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 17 - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்னையில் கூடி ஆய்வு செய்தனர. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்னையில் கூடி ஆய்வு செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 2_வது மாடியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய இயக்குனர் எஸ்.வி.சிங் முன்னிலை வகித்தார்.
தமிழகம் சார்பில் மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டார். ஆந்திரா தேர்தல் அதிகாரி பன்வர்லால், கர்நாடகா தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷா, கேரளா தேர்தல் அதிகாரி நளினி நீட்டோ, புதுச்சேரி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
5 மாநில தேர்தல் அதிகாரிகளும் 11 மணிக்கு தேர்தல் தொடர்பான ஆய்வைத் தொடங்கினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
5 மாநிலங்களிலும் எத்தனை கட்டமாக ஓட்டுப் பதிவை நடத்த வசதி, வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மற்ற 3 பெரிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது பற்றி பேசப்பட்டது.
2 கட்டங்களாக தென் மாநிலங்களில் ஓட்டுப்பதிவை நடத்தும்போது பாதுகாப்புப் படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசத்தை பொறுத்து 2 கட்ட ஓட்டுப் பதிவுக்கும் உள்ள கால இடைவெளியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
மொத்தம் எத்தனை வாக்கு சாவடிகள் உள்ளன? அதில் எத்தனை ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பது பற்றியும் பேசப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது பற்றியும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பேசினார்கள். கள்ள ஓட்டு போடுவதை 100 சதவீதம் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டது.
இது தவிர மின்னணு எந்திரங்களை தயார்படுத்துவது, ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுப்பது, ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்வது, மற்றும் தேர்தல் பிரசாரத்தையும், பிரசார செலவையும் கண்காணிப்பது ஆகியவைகள் பற்றியும் பேசப்பட்டது.
ஓட்டுப்பதிவின்போது இடையூறுகளை தவிர்க்க பறக்கும் படையை பயன் படுத்துவது பற்றி அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிட்டனர். ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான இடம், அதிகாரிகள் பற்றியும் பேசப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் தென் மாநிலங்களில் வரும் உள்ளூர் பண்டிகை பற்றி கேட்கப்பட்டது. உள்ளூர் பண்டிகை நாட்களில் ஓட்டுப்பதிவை தவிர்க்கும் வகையில் கருத்துக்கள் திரட்டப்பட்டது.
5 மாநில தேர்தல் அதிகாரிகளின் இந்த கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
இன்றைய ராசிபலன்
12 May 2025