எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 17 - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று சென்னையில் கூடி ஆய்வு செய்தனர. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 தென் மாநில தேர்தல் அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை சென்னையில் கூடி ஆய்வு செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 2_வது மாடியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய இயக்குனர் எஸ்.வி.சிங் முன்னிலை வகித்தார்.
தமிழகம் சார்பில் மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கலந்து கொண்டார். ஆந்திரா தேர்தல் அதிகாரி பன்வர்லால், கர்நாடகா தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷா, கேரளா தேர்தல் அதிகாரி நளினி நீட்டோ, புதுச்சேரி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
5 மாநில தேர்தல் அதிகாரிகளும் 11 மணிக்கு தேர்தல் தொடர்பான ஆய்வைத் தொடங்கினார்கள். சுமார் 2 மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
5 மாநிலங்களிலும் எத்தனை கட்டமாக ஓட்டுப் பதிவை நடத்த வசதி, வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மற்ற 3 பெரிய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது பற்றி பேசப்பட்டது.
2 கட்டங்களாக தென் மாநிலங்களில் ஓட்டுப்பதிவை நடத்தும்போது பாதுகாப்புப் படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதற்கான கால அவகாசத்தை பொறுத்து 2 கட்ட ஓட்டுப் பதிவுக்கும் உள்ள கால இடைவெளியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
மொத்தம் எத்தனை வாக்கு சாவடிகள் உள்ளன? அதில் எத்தனை ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பது பற்றியும் பேசப்பட்டது. அந்த ஓட்டுச் சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பது பற்றியும் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பேசினார்கள். கள்ள ஓட்டு போடுவதை 100 சதவீதம் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யவும் கூட்டத்தில் திட்ட மிடப்பட்டது.
இது தவிர மின்னணு எந்திரங்களை தயார்படுத்துவது, ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுப்பது, ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்வது, மற்றும் தேர்தல் பிரசாரத்தையும், பிரசார செலவையும் கண்காணிப்பது ஆகியவைகள் பற்றியும் பேசப்பட்டது.
ஓட்டுப்பதிவின்போது இடையூறுகளை தவிர்க்க பறக்கும் படையை பயன் படுத்துவது பற்றி அதிகாரிகள் கருத்துக்கள் வெளியிட்டனர். ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான இடம், அதிகாரிகள் பற்றியும் பேசப்பட்டது.
ஏப்ரல், மே மாதங்களில் தென் மாநிலங்களில் வரும் உள்ளூர் பண்டிகை பற்றி கேட்கப்பட்டது. உள்ளூர் பண்டிகை நாட்களில் ஓட்டுப்பதிவை தவிர்க்கும் வகையில் கருத்துக்கள் திரட்டப்பட்டது.
5 மாநில தேர்தல் அதிகாரிகளின் இந்த கருத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தலைமை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்படும். அதற்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை முடிவு செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய அணிக்கு கோலி மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் வேண்டுகோள்
17 Jul 2025மும்பை: இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரரான மதன் லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4-வது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும்: இர்பான்
17 Jul 2025மான்செஸ்டர்: 4-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் விழிப்புணர்வுக்காக ஆயில் போர்டுகள் வைக்க அறிவுறுத்தல்
17 Jul 2025புதுடெல்லி: மாணவர்களின் விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் 'ஆயில்' போர்டுகள் வைக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.
-
மகளிர் முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
17 Jul 2025சவுத்தம்டான்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
சுற்றுப்பயணம்...
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத