எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 17 - ஆலந்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னை கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:_ தலைமை தேர்தல் கமிஷனுக்கு தென் மாநிலத்தில் துணைக் குழு உள்ளது. 5 மாநில தேர்தல் அதிகாரிகளைக் கொண்ட இந்த துணைக் குழு இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்தியது.
பாராளுமன்றத்துக்கு தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்படும்போது இந்த துணைக்குழு கூட்டப்படுவது உண்டு. அதன்படி இன்றைய கூட்டம் நடக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் அதிகாரிகள், ஏஜெண்டுகள் எப்படி செயல்பட வேண்டும் என்று கையேடு உள்ளது. அந்த கையேடு குறிப்புகளை திறம்பட செயல் படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம்.
மேலும் அந்த கையேட்டில் புதிய வழிகாட்டி நெறி முறைகளை சேர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினோம். குறிப்பாக வாக்காளர் பட்டியல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் பேசினோம்.
தமிழ்நாட்டில் ஜனவரி 6_ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று வாக்காளர்கள் சரி பார்த்து கொள்ளலாம்.
மேலும் 18 வயது பூர்த்தியானவர்கள் அந்த வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளலாம். அதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும்.
கேள்வி:_ ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் எப்போது நடத்தப்படும்?
பதில்:_ ஆலந்தூரில் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அங்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக நாங்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருடன் பேசி உள்ளோம். தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்.
கேள்வி:_ பாராளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா?
பதில்:_ இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்.
இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Sep 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது
13 Sep 2025சென்னை : நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்