முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      இந்தியா
Mohan-Bhagwat 2024-08-28

Source: provided

மும்பை : இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன என்று  மோகன் பகவத் கூறியுள்ளார்.

நாக்பூரில் பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவரின் 7-வது நிறுவன நாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது இந்தியாவுக்கு அதிக வரி விதித்த அமெரிக்காவை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன. இந்தியா வலுவாக வளர்ந்தால் தங்களுக்கு என்ன நேரிடும், தங்கள் நிலை என்னவாகும் என்று உலக நாடுகள் நினைக்கின்றன. இதன் காரணமாகவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.

ஆனால் நாம் எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஏழு கடல் தொலைவில் இருக்கிறார்கள். அவர்களுடன் நமக்கு எந்த தொடர்பும் இல்லை. பின்னர் ஏன் இந்த பயம்? மனிதர்களும் சரி, நாடுகளும் சரி தங்கள் உண்மையான சுயத்தை புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகளை தொடர்ந்து சந்திப்பார்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதுடன், பயத்தை வென்றால் நமக்கு எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து