எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,டிச.17 - நன்றி கெட்ட கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி. பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளது. அநேகமாக வரும் மே மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனிடையே கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை நன்றி கெட்ட கட்சி என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது கருணாநிதிக்கு 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா? என்று ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது நன்றி இல்லாமல் பேசுவது கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் குமறுகிறார்கள்.
இளங்கோவன்:_
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கண்டித்து உள்ளார். அவர் கூறியதாவது:_ காங்கிரஸ் மீது இப்போது கூறும் குறைகளை கருணாநிதி இதற்கு முன்பும் கூறிவந்துள்ளார். இதே கருணாநிதி சில மாதங்களுக்கு முன் தன் மகளின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டது ஏன்? இருந்தாலும் அவரது அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெரிய சுமை நீங்கிவிட்டதாக கருதுகிறோம். தி.மு.க.வினரால் எங்களுக்கு ஏற்பட்ட கரை நீங்கிவிட்டதாகவே உணருகிறேன் என்று கூறினார்.
விஜயதாரணி
தி.மு.க.வுடன் நீண்ட நெடுங்காலமாக காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. ஆனால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்தது இல்லை. நாங்கள் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள். மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவு கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். 2ஜி வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் நேர்மையாகவே நடந்து கொண்டது. முறையான விசாரணை நடந்துதான் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று விஜயதாரணி கூறியுள்ளார். தி.மு.க.விலகியதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாராயாணசாமி
9 ஆண்டுகள் உறவு வைத்திருந்தார்கள். இப்போது என்ன குறையை கண்டார்கள். என்பதுதான் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். அதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று நாராயணசாமி மேலும் கூறினார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் கைதான பிறகுதான் அந்த கூட்டணியில் அவர்களுக்கு ஒரு கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதுவரை மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்காத கருணாநிதி ஈழத்தமிழர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசை மெல்ல மெல்ல விமர்சிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரே அடியாக உறவை முறித்துக்கொண்டுவிட்டார். ஆனால் இதை சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
கருணாநிதியின் விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறியதாவது:_
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதிக்கு வராத கோபம் இப்போது வந்திருக்கிறது. காரணம் 2ஜி வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் சிக்க வைத்தது காங்கிரஸ், சிறையில் தள்ளியது காங்கிரஸ் என்று கருணாநிதி கூறுகிறார். 2ஜி வழக்கு முடியும் தருவாயில் அவர் இப்படி சொல்கிறார். ஆக குடும்பமா? நாடா? என்ற கேள்வி வரும்போது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்கு வழக்கம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது அவருக்கு வருகிறது என்றால் எல்லாம் குடும்பப்பாசம்தான். தன் கட்சியினரை 2ஜி வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள் என்ற கோபம்தான் அவரது விமர்சனத்திற்கு காரணம். இவ்வாறு தா.பாண்டியன் கருணாநிதி மீது அடுக்ககாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருணாநிதியை கண்டித்து உள்ளனர். இது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவரை அவரது கட்சியினரே நம்பமாட்டார்கள் என்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு பற்றி கருணாநிதியின் நினைவுக்கு வராதது ஏன் என்றும் சில பிரமுகர்கள் கேள்வி எழுப்பினர். கருணாநிதியின் விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வியப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
21 Jul 2025மதுரை : விளையாட்டு போட்டிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.