எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,டிச.17 - நன்றி கெட்ட கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி. பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளது. அநேகமாக வரும் மே மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனிடையே கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை நன்றி கெட்ட கட்சி என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது கருணாநிதிக்கு 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா? என்று ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது நன்றி இல்லாமல் பேசுவது கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் குமறுகிறார்கள்.
இளங்கோவன்:_
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கண்டித்து உள்ளார். அவர் கூறியதாவது:_ காங்கிரஸ் மீது இப்போது கூறும் குறைகளை கருணாநிதி இதற்கு முன்பும் கூறிவந்துள்ளார். இதே கருணாநிதி சில மாதங்களுக்கு முன் தன் மகளின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டது ஏன்? இருந்தாலும் அவரது அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெரிய சுமை நீங்கிவிட்டதாக கருதுகிறோம். தி.மு.க.வினரால் எங்களுக்கு ஏற்பட்ட கரை நீங்கிவிட்டதாகவே உணருகிறேன் என்று கூறினார்.
விஜயதாரணி
தி.மு.க.வுடன் நீண்ட நெடுங்காலமாக காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. ஆனால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்தது இல்லை. நாங்கள் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள். மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவு கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். 2ஜி வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் நேர்மையாகவே நடந்து கொண்டது. முறையான விசாரணை நடந்துதான் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று விஜயதாரணி கூறியுள்ளார். தி.மு.க.விலகியதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாராயாணசாமி
9 ஆண்டுகள் உறவு வைத்திருந்தார்கள். இப்போது என்ன குறையை கண்டார்கள். என்பதுதான் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். அதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று நாராயணசாமி மேலும் கூறினார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் கைதான பிறகுதான் அந்த கூட்டணியில் அவர்களுக்கு ஒரு கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதுவரை மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்காத கருணாநிதி ஈழத்தமிழர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசை மெல்ல மெல்ல விமர்சிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரே அடியாக உறவை முறித்துக்கொண்டுவிட்டார். ஆனால் இதை சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
கருணாநிதியின் விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறியதாவது:_
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதிக்கு வராத கோபம் இப்போது வந்திருக்கிறது. காரணம் 2ஜி வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் சிக்க வைத்தது காங்கிரஸ், சிறையில் தள்ளியது காங்கிரஸ் என்று கருணாநிதி கூறுகிறார். 2ஜி வழக்கு முடியும் தருவாயில் அவர் இப்படி சொல்கிறார். ஆக குடும்பமா? நாடா? என்ற கேள்வி வரும்போது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்கு வழக்கம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது அவருக்கு வருகிறது என்றால் எல்லாம் குடும்பப்பாசம்தான். தன் கட்சியினரை 2ஜி வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள் என்ற கோபம்தான் அவரது விமர்சனத்திற்கு காரணம். இவ்வாறு தா.பாண்டியன் கருணாநிதி மீது அடுக்ககாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருணாநிதியை கண்டித்து உள்ளனர். இது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவரை அவரது கட்சியினரே நம்பமாட்டார்கள் என்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு பற்றி கருணாநிதியின் நினைவுக்கு வராதது ஏன் என்றும் சில பிரமுகர்கள் கேள்வி எழுப்பினர். கருணாநிதியின் விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வியப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி