எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச.17 - நன்றி கெட்ட கட்சி என்று காங்கிரசை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி. பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு வரவுள்ளது. அநேகமாக வரும் மே மாதம் இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனிடையே கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை நன்றி கெட்ட கட்சி என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டபோது கருணாநிதிக்கு 2ஜி வழக்கு நினைவுக்கு வரவில்லையா? என்று ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார். 9 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது நன்றி இல்லாமல் பேசுவது கருணாநிதிதான் என்று காங்கிரஸ் தலைவர்கள் குமறுகிறார்கள்.
இளங்கோவன்:_
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கண்டித்து உள்ளார். அவர் கூறியதாவது:_ காங்கிரஸ் மீது இப்போது கூறும் குறைகளை கருணாநிதி இதற்கு முன்பும் கூறிவந்துள்ளார். இதே கருணாநிதி சில மாதங்களுக்கு முன் தன் மகளின் எம்.பி.பதவிக்காக காங்கிரசிடம் ஆதரவு கேட்டது ஏன்? இருந்தாலும் அவரது அறிவிப்பு எங்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. பெரிய சுமை நீங்கிவிட்டதாக கருதுகிறோம். தி.மு.க.வினரால் எங்களுக்கு ஏற்பட்ட கரை நீங்கிவிட்டதாகவே உணருகிறேன் என்று கூறினார்.
விஜயதாரணி
தி.மு.க.வுடன் நீண்ட நெடுங்காலமாக காங்கிரஸ் உறவு வைத்திருந்தது. ஆனால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்தது இல்லை. நாங்கள் துரோகம் செய்ததாக கூறுகிறார்கள். மேல்சபை தேர்தலில் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவு கொடுத்ததை நினைத்துப்பார்க்க வேண்டும். 2ஜி வழக்கு விவகாரத்தில் காங்கிரஸ் நேர்மையாகவே நடந்து கொண்டது. முறையான விசாரணை நடந்துதான் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று விஜயதாரணி கூறியுள்ளார். தி.மு.க.விலகியதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாராயாணசாமி
9 ஆண்டுகள் உறவு வைத்திருந்தார்கள். இப்போது என்ன குறையை கண்டார்கள். என்பதுதான் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்து அவர்கள் விலகினார்கள். அதை அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான். யாருடன் கூட்டணி என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று நாராயணசாமி மேலும் கூறினார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டு காலம் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. 2ஜி வழக்கில் ஆ.ராசாவும் கனிமொழியும் கைதான பிறகுதான் அந்த கூட்டணியில் அவர்களுக்கு ஒரு கசப்பு உணர்வு ஏற்பட்டது. அதுவரை மத்திய காங்கிரஸ் அரசை விமர்சிக்காத கருணாநிதி ஈழத்தமிழர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரசை மெல்ல மெல்ல விமர்சிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரே அடியாக உறவை முறித்துக்கொண்டுவிட்டார். ஆனால் இதை சந்தர்ப்பவாதம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
கருணாநிதியின் விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து தா.பாண்டியன் கூறியதாவது:_
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது கருணாநிதிக்கு வராத கோபம் இப்போது வந்திருக்கிறது. காரணம் 2ஜி வழக்கில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் சிக்க வைத்தது காங்கிரஸ், சிறையில் தள்ளியது காங்கிரஸ் என்று கருணாநிதி கூறுகிறார். 2ஜி வழக்கு முடியும் தருவாயில் அவர் இப்படி சொல்கிறார். ஆக குடும்பமா? நாடா? என்ற கேள்வி வரும்போது குடும்பத்தை முன்னிலைப்படுத்துவதுதான் அவருக்கு வழக்கம். தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத கோபம் இப்போது அவருக்கு வருகிறது என்றால் எல்லாம் குடும்பப்பாசம்தான். தன் கட்சியினரை 2ஜி வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள் என்ற கோபம்தான் அவரது விமர்சனத்திற்கு காரணம். இவ்வாறு தா.பாண்டியன் கருணாநிதி மீது அடுக்ககாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருணாநிதியை கண்டித்து உள்ளனர். இது கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் ஒரு நல்ல நடிகர் என்றும் அவரை அவரது கட்சியினரே நம்பமாட்டார்கள் என்றும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். கனிமொழியின் எம்.பி.பதவிக்காக ஆதரவு கேட்டபோது 2ஜி வழக்கு பற்றி கருணாநிதியின் நினைவுக்கு வராதது ஏன் என்றும் சில பிரமுகர்கள் கேள்வி எழுப்பினர். கருணாநிதியின் விமர்சனம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியிலும் வியப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


