எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.25 - இந்தியாவை வழி நடத்தும் அதிகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்குவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 26_வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி பறிக்க தீவிர களப்பணி ஆற்றுவோம் என்று எம்ஜிஆர் நினைவிடம் முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து எம்ஜிஆர் நினைவிடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழிகளை வாசிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் அங்கு திரளாக கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரும்பச்சொல்லி உறுதியேற்றனர்.
உறுதிமொழி விபரம் வருமாறு:_
ழூ அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் புகழையும், மனிதாபிமான உணர்வுகளையும் எந்நாளும் மனதில் கொண்டு வாழ்வோம்.
ழூ முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் கிராமங்கள் தோறும் பரப்ப உறுதி ஏற்போம்.
ழூ எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக வெற்றி சிகரத்தை தொடுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வறியா உழைப்பும் ஒப்பற்ற தியாகமும்தான் காரணம் என்பதை ஒருநாளும் மறவாது இருக்க உறுதி கூறுகிறோம்.
ழூ 'எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' _ என்ற தூய உள்ளத்தோடு பணியாற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கும், அதிமுகவிற்கும் ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு எந்நாளும் நன்றியோடும், உறுதியோடும் இருப்போம்.
ழூ பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் நலன் காக்க தன்னலம் இன்றி பாடுபடும் அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனம் மகிழும் வண்ணம் தூய தொண்டராக மக்கள் பணியாற்றுவோம்.
ழூ அறிவும் ஆற்றலும் மிக்க தலைவருமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூலமாக இந்திய திரு நாட்டிற்க்கு புதுவாழ்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்நேரத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றியை பெற அள்ளும் பகலும் அயராது உழைப்போம்.
ழூ தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான காவிரி நதி நீர் பிரச்சனையில் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானங்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று உலக நாடுகள் பலவும் குரல் எழுப்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்ற உண்மையை தமிழக மக்களிடம் விலக்கிக் கூறுவோம்.
ழூ தமிழக முதலமைச்சர் தான் இந்திய நாட்டின் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம்.
ழூ அம்மா உணவகம், அம்மா குடிநீர் திட்டம், பண்ணை பசுமை காய்கறித் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய திட்டங்களை இந்திய நாட்டிற்கே விரைந்து வர பணியாற்றுவோம்.
ழூ நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சொத்து தனியார் வசம் சென்றுவிடாமல் மதியுகமாய் செயல்பட்ட முதலமைச்சர் நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலை வந்தால் மட்டுமே இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
ழூ எப்பொழுதும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே சிந்தித்து அவர்களது வாழ்வு ஏற்றம் பெறுவதற்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சருடைய வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய பணியாற்றுவோம்.
ழூ தமிழக மக்களுக்கு உண்மையான உணவுப் பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர்தான் பசிப்பிணி போக்கும் அன்னமிட்ட கை என்ற உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
ழூ மக்களின் உடமைக்கும், உரிமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்திய கருணாநிதியின் அராஜகங்களை முறியடித்து மக்களுக்கு பாதுகாப்பையும் நிறைவான வாழ்வையும் அளித்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான பொற்கால ஆட்சிக்கு மக்கள் பேராதரவை அளித்திட அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை செய்ய உறுதி ஏற்போம்.
ழூ விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40" தொகுதிகளிலும் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்து எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் அதிகாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கரங்களில் வழங்கும் வகையில் அர்ப்பணிப்போடு கூடிய கடும் உழைப்பின் மூலம் முழு ஆற்றலோடு களப்பணி ஆற்றுவோம்.
இவ்வாறு உறுதி ஏற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.


