எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.25 - அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் வந்து விட்டது. இக்கட்சி நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க. - தே.மு.தி.க. மக்கள் விரும்புகிற ஒரு வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளில் புதிய தமிழகம் கட்சி, குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளன. தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வும் வந்து இணைய வேண்டும் என்று இரு கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் விரும்பினார்கள். அவர்களது விருப்பம் நேற்று நிறைவேறியது. அ.தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நேற்று வந்து சேர்ந்து விட்டது.
அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கட்சி சார்பில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தே.மு.தி.க. தேர்தல் பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தையை தொடங்கியபோது இருதரப்பிலும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சுமார் 1 1/4 மணி நேரம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வெளியே வந்தபோது தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அக்கரையோடு உள்ள அரசியல் கட்சிகள் ஒரு அணியாக உருவாகவேண்டும் என்ற எண்ணம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளோம். மக்கள் விரும்புகிற கூட்டணி இந்த கூட்டணி. வருகிற தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். இது வெற்றி கூட்டணி.
இவ்வாறு பண்ரூட்டி கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்பொழுது?
பதில்:- இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசி முடித்துள்ளோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மீண்டும் கூடி பேச திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று கூறினார். இப்பொழுது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே?
பதில்:- ``மக்கள் குரலே, மகேசன் குரல்'' இப்போது நடக்கும் தி.மு.க. ஆட்சியை தொலைத்துக் கட்டவும், தேர்தலில் புதிய ஆட்சி மலரவும் மக்களின் குரலும், தெய்வத்தின் குரலும், ஒன்றாக உள்ளது. அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேள்வி:- ஜெயலலிதாவை, விஜயகாந்த் எப்போது சந்தித்து பேசுவார்?
பதில்:- இருதரப்பிலும், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சந்தித்து பேசுவார்.
கேள்வி: ஆட்சியில் பங்கை நீங்களும் கேட்பீர்களா?
பதில்: அந்த ஆசையெல்லாம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு பண்ருட்டி பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது