எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.25 - அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் வந்து விட்டது. இக்கட்சி நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க. - தே.மு.தி.க. மக்கள் விரும்புகிற ஒரு வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளில் புதிய தமிழகம் கட்சி, குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளன. தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வும் வந்து இணைய வேண்டும் என்று இரு கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் விரும்பினார்கள். அவர்களது விருப்பம் நேற்று நிறைவேறியது. அ.தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நேற்று வந்து சேர்ந்து விட்டது.
அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கட்சி சார்பில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தே.மு.தி.க. தேர்தல் பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தையை தொடங்கியபோது இருதரப்பிலும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சுமார் 1 1/4 மணி நேரம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வெளியே வந்தபோது தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அக்கரையோடு உள்ள அரசியல் கட்சிகள் ஒரு அணியாக உருவாகவேண்டும் என்ற எண்ணம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளோம். மக்கள் விரும்புகிற கூட்டணி இந்த கூட்டணி. வருகிற தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். இது வெற்றி கூட்டணி.
இவ்வாறு பண்ரூட்டி கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்பொழுது?
பதில்:- இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசி முடித்துள்ளோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மீண்டும் கூடி பேச திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று கூறினார். இப்பொழுது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே?
பதில்:- ``மக்கள் குரலே, மகேசன் குரல்'' இப்போது நடக்கும் தி.மு.க. ஆட்சியை தொலைத்துக் கட்டவும், தேர்தலில் புதிய ஆட்சி மலரவும் மக்களின் குரலும், தெய்வத்தின் குரலும், ஒன்றாக உள்ளது. அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேள்வி:- ஜெயலலிதாவை, விஜயகாந்த் எப்போது சந்தித்து பேசுவார்?
பதில்:- இருதரப்பிலும், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சந்தித்து பேசுவார்.
கேள்வி: ஆட்சியில் பங்கை நீங்களும் கேட்பீர்களா?
பதில்: அந்த ஆசையெல்லாம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு பண்ருட்டி பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



