எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 7 - மின்சார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தாலும் கால தாமதம் ஏற்படுவதால் தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர்ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் மிக கடுமையான மின் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி இருப்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. தமிழக மின் வாரியம் 1500 மெகாவாட் மின் பற்றாக்குறையால், மின்தடையை அமல்படுத்தி உள்ளது. அடிக்கடி குறிப்பிட்ட நேரம் மட்டுமல்லாமல் மின் தடை ஏற்பட்டு விடுகிறது. இதனால் பொதுமக்களும், தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற மின்தடை காரணமாக வேளாண்துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், பம்புசெட்கள் இயங்காமல் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக செய்யப்பட்டு வரும் புதிய திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன.
இந்த மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி தொடங்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய மின் உற்பத்தி திட்டங்களான கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் (2ல1000 மெகாவாட்) மற்றும் நெய்வேலி அனல் மின் நிலைய 2ம் பகுதி விரிவாக்கம் (2ல250 மெகா வாட்) ஆகியவை கடந்த 2009-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரு மின் உற்பத்தி திட்டகட்டுமான பணிகள் இன்னமும் முடிய வடையாதது, மாநில அரசை கவலை கொள்ள செய்கிறது. மின் சப்ளைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மின்சார நிலையை மேம்படுத்த நான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுத்த போதிலும், உடனடியாக மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்ய இயலாத சூழ்நிலை நிலவுவதால் தமிழ் நாட்டில் மேலும் சில காலத்துக்கு மின் தட்டுப்பாடு தொடரக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன். எனவே nullநீங்கள் இதில் தலையிட்டு தமிழக மக்களும், விவசாயிகளும் தாங்கள் உண்மையான தேவையை nullர்த்தி செய்து கொள்ள, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழ் நாட்டுக்கு கூடுதலாக மேலும் 1000 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து உடனே உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ் நாட்டில் நடந்து வரும் மத்திய மின் உற்பத்தி திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு உத்தர விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுதி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


