எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரியோடிஜெனீரோ, மே, 30 - உலகமெங்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் 2014 ம் ஆண்டிற்கான உலக கால்பந்தாட்டப்போட்டி ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை பிரேசிலில் நடக்கவுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் ஜூரம் என்றால் உலகில் முக்கால்வாசிப் பேருக்கு கால்பந்துக் காய்ச்சல்தான் அதிகம். இப்படிப்பட்டர்களுக்கு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி வந்து விட்டால் போதும் போட்டது போட்டபடி.. கமான் கமான் என்று டிவி முன்பும் முடிந்தால் போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் குவிந்தும் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள். உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் இந்த ஒரு மாத காலமும் உலகம் முழுவதும் இதுதான் பேச்சாக இருக்கும். யார் எத்தனை கோல் அடிப்பார்கள்.. எந்த அணிக்குக் கோப்பை.. என்ற ஹேஸ்யங்களும், ஜோசியங்களும் களை கட்டியிருக்கும். உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி எவ்வளவு ஹாட்டானதோ அதை விட ஹாட்டானது அதைப் பார்க்க வரும் ரசிகர் கூட்டம்.. ஆண்கள் மட்டுமல்ல, பெண் ரசிகைகளும்தான். வாருங்கள்.. உலகக் கோப்பைப் போட்டித் தொடர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை கண்கவர் கால்பந்து ரசிகைகளின் புகைப்படங்களி்ன் துணையுடன் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்.
கால்பந்துக்காக உயிரையே கொடுக்கத் துணியும் ரசிகர்களைக் கொண்ட பிரேசில் நாட்டில்தான் 2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதை 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் தானாகவே போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. மற்றவர்கள் தகுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெற்றார்கள்.
ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, அல்ஜீரியா, காமரூன், கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈகுவடார், உருகுவே, பெல்ஜியம், போஸ்னி ஹெர்ஸகோவினா, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள்தான் இந்த வருடத்து உலகக் கோப்பைப் போட்டியில் மோதப் போகின்றன.
உலக்க கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மாபெரும் பரிசுத் தொகை காத்திருக்கிறது. மொத்தப் பரிசுத் தொகை 576 மில்லியன் டாலராகும். இது கடந்த 2010 தொடரை விட 37 சதவீதம் கூடுதலாகம்.
குரூப் போட்டிகளுடன் விடைபெறும் 16 அணிகளுக்கு தலா 80 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக தரப்படும்.
ரவுண்ட் 16 வரை வந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 90 லட்சம் டாலர் பரிசாக தரப்படும்.
காலிறுதிப் போட்டிகள் வரை வந்து வெளியேறும் 4 அணிகளுக்கு தலா 1.4 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
4வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும். 3வது இடம் பிடிக்கும் அணிக்கு 2.2 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு 3.5 கோடி டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 2வது இடம் பெறும் அணிக்கு 2.5 கோடி டாலர் பரிசாக கிடைக்கும்.
ரியோடிடி ஜெனீரோ, பிரேசிலியா, சாவோ பாலோ, போர்டாலெஸா, பெலோ ஹாரிசான்டே, சால்வடார், போர்டோ அல்கெரே, ரெசிபி, குயாபா, மனாஸ், நடால், கரிடிபா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.
ஏ, பி,சி, டி, இ, எப், ஜி, எச் என மொத்தம் 8 குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில், குரோஷியா, மெக்ஸிகோ, காமரூன் ஆகியவை உள்ளன.
பி பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா ஆகியவை வருகின்றன.
சி பிரிவில் கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் ஆகியவை உள்ளன.
டி பிரிவில் உருகுவே, கோஸ்டா ரிகா, இங்கிலாந்து, உருகுவே ஆகிய அணிகள் உள்ளன.
இ பிரிவில் சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ் ஆகியவை வருகின்றன.
எப் பிரிவில் அர்ஜென்டினா, போஸ்னியா ஹெர்ஸகோவினா, ஈரான், நைஜீரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜி பிரிவில் ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா ஆகியவை உள்ளன.
எச் பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா ஆகிய அணிகள் உள்ளன.
காலிறுதிப் போட்டிகள் ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெறும்.
3வது இடத்துக்கான போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெறும்.
ஜூலை 13ம் தேதி கோப்பையைப் பெறப் போகும் அணியை இறுதி செய்யும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடந்த 201ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் அணி அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. 2வது இடத்தை நெதர்லாந்தும், 3வது இடத்தை ஜெர்மனியும், 4வது இடத்தை உருகுவேயும் கைப்பற்றின. இந்த முறை கோப்பையை வெல்லப் போவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
17 Jul 2025பெங்களூரு, கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.