எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,ஜூன்.14 - கனிமொழி ஜாமீன் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி எங்கே என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ரூ.1.76 கோடி லட்சம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி.யும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும் சரத்குமாரும் முதலில் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி,கடந்த மே மாதம் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையொட்டி டெல்லி ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது பலமுறை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்க டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 8-ம் தேதி மறுத்துவிட்டது. கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கனிமொழிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை மாற்றி சொல்ல வைக்க முடியும் என்பதோடு ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்பு உள்ளது அதனால் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ஐகோர்ட் அறிவித்தது. இதையும் எதிர்த்து கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி நேற்று சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமல்லாது சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படுவதின் தற்போதைய நிலை என்ன? அந்த பணம் தற்போது அந்த பணம் தற்போது எங்கே இருக்கிறது. அந்த பணம் மீட்கப்பட்டுவிட்டதா அல்லது இல்லை என்ற விபரத்தை இன்னும் மூன்று நாட்களுக்குள் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறபட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி தற்போது கரீம் மொரானி கம்பெனியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் ஊழல் என்பது மிகவும் மோசமான மனி உரிமை மீறலாகும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலை தொடர்புத்துறையாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்டரம் ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் அடைந்த கம்பெனிகள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. மேலும் கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. மேலும் சரத்குமாரோடு சேர்ந்து கனிமொழியும் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சுப்ரீம்கோர்ட்டும் ஜாமீன் வழங்காது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. மொரானி கம்பெனியில் இருக்கும் ரூ.214 கோடியை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி