எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூன்.16 - அ.தி.மு.க. - தேமுதிக எதிர்ப்பால் மதுரை மாநகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்து, அதிமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. திமுக மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் செபாஸ்டின் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் திமுக கவுன்சிலர்கள் சோர்ந்து போய் இருந்தனர். கேலியும், கிண்டலும், ஏளனமான சிரிப்பும் காணாமல் போய் ஒரு இருக்கமான முகத்துடன் திமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த காலத்தில் போலீசை வைத்து மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவை மக்கள் நல்ல தீர்ப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. ஜெயலலிதாவை 3 வது முறையாக மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர். ஜனநாயகம் செத்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மதுரை மாவட்ட கலெக்டர் அதை காப்பாற்றி உள்ளார். அதே போல் இது தாண்டா போலீஸ் என்பது போல் போலீசாரை சரியாக செயல்பட விட்ட கமிஷனர் கண்ணப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்டி வந்தோம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்திய அளவில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. பணத்தால் தமிழக வாக்காளர்களை எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து ஜெயலலிதாவை மிகப்பெரும்பான்மையாக வெற்றியடைய செய்து, பணத்தை நம்பிய அக்கிரமகாரர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றிய தமிழக மக்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த தேர்தல் கமிஷனுக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தென் மாநில முதல்வராக செயல்பட்ட மு.க.அழகிரியாலும் சுரேஷ்பாபுவாலும் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. ஆட்சி மாறி உள்ளது அதிகாரிகள் இனிமேலாவது திருந்தி கொள்ளவேண்டும். நாங்கள் யாரையும் பழி வாங்கமாட்டோம். பொதுமக்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதில் அதிமுக தலையிடாது. கடந்த 4 மாதமாக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் 27 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு அது பென்சனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் அமைச்சரோ, நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ தலையிடவில்லை. நல்லதை செய்யும் போது நாங்கள் குறுக்கிடமாட்டோம். உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதே போல் தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். தவறு செய்த உங்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். இனிமேல் வரும் 5 ஆண்டுகளில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து அதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி புத்துயிர் பெற்று செழிப்பு மிக்க மாநகராட்சியாக திகழ வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன் பேசினார். அப்போது தேமுதிக கவுன்சிலர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி விட்டது. எனவே எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு மேயர் தேன்மொழி அனுமதி மறுத்ததால் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்து, கூட்டம் முடிந்தது என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அதிமுக ,தேமுதிக எதிர்ப்பால் கூட்டம் பாதியிலேலே முடிந்தது. இதை தொடர்ந்து அதிமுக,தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு மேயர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டசெய்தி குறிப்பில் தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுத்த தகவல் எங்களுக்கு வரவில்லை.மேலும் இது உள்ளாட்சி சம்பந்தப்பட்டது. இதில் மாநில தேர்தல் கமிஷன்தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆணையாளர் செபாஸ்டினுக்கு கொடுத்த போது வாங்கி கொண்டார். ஆனால் மேயரோ, துணை மேயரோ இனிப்பை வாங்க மறுத்துவிட்டனர். திமுக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கிய போது ஏய்யா எங்களை பாடாபடுத்திறீங்க என்று கூறியபடி இனிப்பை வாங்கமறுத்துவிட்டனர். இதே போல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் இனிப்பை வாங்கவில்லை. அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுக மண்டல தலைவர் நாகராஜனுக்கு இனிப்பை ஊட்டி விட்டது பார்ப்பதற்குஏ வேடிக்கையாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.