எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூன்.16 - அ.தி.மு.க. - தேமுதிக எதிர்ப்பால் மதுரை மாநகராட்சி கூட்டம் பாதியில் முடிந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை இழந்து, அதிமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. திமுக மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் செபாஸ்டின் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் திமுக கவுன்சிலர்கள் சோர்ந்து போய் இருந்தனர். கேலியும், கிண்டலும், ஏளனமான சிரிப்பும் காணாமல் போய் ஒரு இருக்கமான முகத்துடன் திமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த காலத்தில் போலீசை வைத்து மதுரை மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவை மக்கள் நல்ல தீர்ப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் வென்றுள்ளது. ஜெயலலிதாவை 3 வது முறையாக மக்கள் அரியணையில் அமர்த்தியுள்ளனர். ஜனநாயகம் செத்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மதுரை மாவட்ட கலெக்டர் அதை காப்பாற்றி உள்ளார். அதே போல் இது தாண்டா போலீஸ் என்பது போல் போலீசாரை சரியாக செயல்பட விட்ட கமிஷனர் கண்ணப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்டி வந்தோம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. இந்திய அளவில் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது. பணத்தால் தமிழக வாக்காளர்களை எதுவும் செய்ய முடியாது என்பதை நிரூபித்து ஜெயலலிதாவை மிகப்பெரும்பான்மையாக வெற்றியடைய செய்து, பணத்தை நம்பிய அக்கிரமகாரர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றிய தமிழக மக்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த தேர்தல் கமிஷனுக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தென் மாநில முதல்வராக செயல்பட்ட மு.க.அழகிரியாலும் சுரேஷ்பாபுவாலும் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டது. ஆட்சி மாறி உள்ளது அதிகாரிகள் இனிமேலாவது திருந்தி கொள்ளவேண்டும். நாங்கள் யாரையும் பழி வாங்கமாட்டோம். பொதுமக்களாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இதில் அதிமுக தலையிடாது. கடந்த 4 மாதமாக அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டதால் 27 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு அது பென்சனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் அமைச்சரோ, நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ தலையிடவில்லை. நல்லதை செய்யும் போது நாங்கள் குறுக்கிடமாட்டோம். உப்பு திண்ணவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதே போல் தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். தவறு செய்த உங்களுக்கு தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டவன் எங்கள் பக்கம் இருக்கிறான், மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு தவறுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். இனிமேல் வரும் 5 ஆண்டுகளில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து அதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டும். மாநகராட்சி புத்துயிர் பெற்று செழிப்பு மிக்க மாநகராட்சியாக திகழ வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கணேசன் பேசினார். அப்போது தேமுதிக கவுன்சிலர்கள் தங்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி விட்டது. எனவே எங்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதற்கு மேயர் தேன்மொழி அனுமதி மறுத்ததால் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக அறிவித்து, கூட்டம் முடிந்தது என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். அதிமுக ,தேமுதிக எதிர்ப்பால் கூட்டம் பாதியிலேலே முடிந்தது. இதை தொடர்ந்து அதிமுக,தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு மேயர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டசெய்தி குறிப்பில் தேமுதிகவுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கொடுத்த தகவல் எங்களுக்கு வரவில்லை.மேலும் இது உள்ளாட்சி சம்பந்தப்பட்டது. இதில் மாநில தேர்தல் கமிஷன்தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
திமுகவினருக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்
மாநகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப்பெற்றதை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினர். ஆணையாளர் செபாஸ்டினுக்கு கொடுத்த போது வாங்கி கொண்டார். ஆனால் மேயரோ, துணை மேயரோ இனிப்பை வாங்க மறுத்துவிட்டனர். திமுக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கிய போது ஏய்யா எங்களை பாடாபடுத்திறீங்க என்று கூறியபடி இனிப்பை வாங்கமறுத்துவிட்டனர். இதே போல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களும் இனிப்பை வாங்கவில்லை. அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுக மண்டல தலைவர் நாகராஜனுக்கு இனிப்பை ஊட்டி விட்டது பார்ப்பதற்குஏ வேடிக்கையாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


