எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,பிப்.28 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை ,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.6 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பல சலுகைகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த துறையில் ரூ.20 ஆயிரம் வரை முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அளவு 4.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம். நேரடி வரிவிதிப்பு விதிமுறையில் வருடாந்திரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
சவுதி அரேபியாவில் இனி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை
12 Dec 2025துபாய், முதல்முறையாக சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: டிக்கெட் விற்பனை துவக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம்
12 Dec 2025துபாய், டி-20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
12 Dec 2025ஈரோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
வாரராசிபலன்
13 Dec 2025


