எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,பிப்.28 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை ,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.6 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பல சலுகைகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த துறையில் ரூ.20 ஆயிரம் வரை முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அளவு 4.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம். நேரடி வரிவிதிப்பு விதிமுறையில் வருடாந்திரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.