எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஜூலை - 6 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியில் 2 நாள் பந்த் போராட்டம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதியின் 11 மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பிரச்சனையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கித் தர வேண்டும் என்று கோரி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து தனி தெலுங்கானா அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் உறுதியளித்தபடி இன்னும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படவில்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பதில் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக உறுதியாக உள்ளன. நேற்று முன்தினம் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 75 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தள்ளனர். மேலும் 12 எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், அக்கட்சியின் எம்.பி. விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி. பதவிகளை நேற்று ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சபாநாயகர் மீராகுமாரை சந்திக்கப்போவதாக சந்திரசேகரராவ் கூறியுள்ளார். மேலும் 2 தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆந்திர மாநில ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவரையும் சேர்த்து ராஜினாமா செய்துள்ள ஆந்திர அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தெலுங்கானா பகுதியில் ஐதராபாத் உட்பட 11 மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் தெலுங்கானா பகுதி முழுவதுமே ஸ்தம்பித்தது. 2 நாள் பந்த் போராட்டத்தை அடுத்து இந்த பகுதியில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மார்க்கெட்டுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழு அழைப்பிற்கு இணங்க நேற்று இந்த பந்த் நடைபெற்றது. பந்த்தின் காரணமாக பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சில இடங்களில் சாலைகளில் ஓடிய வாகனங்களை வழிமறித்து தெலுங்கானா ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்த முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மீறிச் சென்றதால் போலீசார் மாணவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் பெரும்பாலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் ஆட்டோ ரிக்ஷாக்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த இரண்டு நாள் பந்த்தை முன்னிட்டு தெலுங்கானா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வரும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையை ஏற்படுத்தி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டு செயற்குழு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசியல் கூட்டு செயற்குழுவில் டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி. உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. தெலுங்கானா பகுதியில் நேற்று நடந்த பந்த் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த 2 நாள் போராட்டத்தின் காரணமாக தெலுங்கானா பகுதியில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு வங்கி பணப் பரிமாற்றங்கள் முடங்கிப்போயுள்ளன. இந்தப் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் வங்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறினார். வங்கி பண பரிமாற்ற முட்டுக்கட்டைகளை போக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.


