எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை 8 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீராராடியாவின் டேப் உரையாடலை வரும் 12-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்வதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசியல் தரகர் நீராராடியாவின் உரையாடல் அடங்கிய டேப் சி.பி.ஐ. வசம் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுத்தர நீராராடியா பல்வேறு அரசியல் பிரமுகர்களுடனும், தொழில் அதிபர்களுடனும் பேசி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.
நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஏ.கே.சிங் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நீராராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப் விவரங்களை வரும் 12 -ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம் என்றார். அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் தாக்கல் செய்வோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


