எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.12 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட அதிபர் சக்சேனா மீது மோசடி புகார் அளித்ததையடுத்து 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விபரம் வருமாறு:- தீராத விளையாட்டு பிள்ளை பட விவகாரத்தில் தனக்கு பாக்கி தரவேண்டியதை திருப்பி கேட்டபோது தன்னை அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணத்தை அபகரித்துக் கொண்டதாக சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்ததன் பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.
தன்னை மிரட்டி தாக்கி ரூ.25 லட்சம் பணத்தை பிடிங்கிக் கொண்டதாக சக்சேனா, அய்யப்பன் மற்றும் இன்னொரு கூட்டாளி மீது புகார் அளித்ததையடுத்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சக்சேனாவின் பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே தியேட்டர் அதிபர்கள் எந்திரன் படம் விவகாரம் சந்பந்தமாக சன் பிக்சர்ஸ் மீதும், கலாநிதி மாறன் மீதும் புகார் அளித்தனர். சக்சேனா மீது ஏற்கனவே வேளச்சேரியில் பெண்ணை தாக்கிய வழக்கிலும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கிலும் போலீசாரால் எப்.ஐ.ஆர். போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் பெண்ணை தாக்கிய வழக்கில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் ஆகும்.
இதனிடையே சக்சேனா விவகாரம் சம்பந்தமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் அனேகம் பேர் புகார் அளிக்க தயாராகி வருகிறார்களாம். 2 நாள் போலீஸ் விசாரணையில் சக்சேனா பல்வேறு விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸில் தான் ஒரு நிர்வாகி மட்டுமே, எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன். மேலுள்ளவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தேன். பட அதிபர்களிடம் பெற்ற பணத்தை மேலே உள்ளவர்களிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு 2 வது முறையாக சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை மாஜிஸ்திரேட் இன்று ஒத்தி வைத்தார். இதனிடையே சக்சேனா மீது மேலும் ஒரு பட அதிபர் ரூ.3.37 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் நேமிசந்த் ஜபக். இவர் பட அதிபர். நான் அவனில்லை, படிக்காதவன், பொக்கிஷம் மற்றும் தனுஷ், அனுஷ்கா நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு மாப்பிள்ளை பட விநியோகத்தின் கோவை விநியோக உரிமையை தன்னிடம் ரூ.3.37 கோடிக்கு விற்ற சக்சேனா பட விநியோகத்தை தராமல் நேரடியாக வெளியிட்டு பணத்தை சுருட்டியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றம் வரும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாததால் தற்போது புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சக்சேனா மீது கோடம்பாக்கம் போலீசார் 420, 406, 386, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சக்சேனா விவகாரத்தில் பொல்லாதவன், ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன், வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர், முத்துக்கு முத்தாக சேட்டிலைட் ரைட்ஸ் சம்பந்தமாக டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகத் துறையில் ஜாம்பவானுமான முக்கிய புள்ளி ஒருவரும் புகார் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்கதை போல் சக்சேனா மீது மேலும், மேலும் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
- கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Jan 2026- மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி
- திருச்சேறை சாரநாதர் விழா தொடக்கம்
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு
- திருமொச்சியூர், திருவாவடுதுறை, திருவானைக
-
இன்றைய ராசிபலன்
23 Jan 2026


