எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி,மார்ச். - 2 - தமிழ்நாட்டில் நிலவும் மோசமான நிலையை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோகுல இந்திரா பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் இமாலய ஊழலால் இந்தியா உலக அளவில் தலைகுனிய நேரிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்றடைந்தது தெள்ளத் தெளிவாகி விட்டது. முதல்வர் பதவியில் இருக்கும் கருணாநிதி தன் குடும்ப சுகத்திற்காக மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் முதலிடம் வகித்த தமிழகம் இன்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தினமும் கொள்ளை, கொலை, லஞ்சம், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தமிழக மக்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.
காரைக்குடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பத்திரப் பதிவு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குவதற்கு இப்பகுதி வாழ் மக்களுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தடைபட்ட காலம் முதல் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் செய்தவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இத்தொழில் முற்றிலுமாக இப்பகுதியில் நலிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் வரப் போகிறது என்ற காரணத்தினால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் நின்றாலும் வர முடியாது என்ற எண்ணத்தால் இப்பகுதியில் பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
காங்கிரசார் தி.மு.க.வுடன் இணைந்திருக்க வேண்டாம். அப்படி இணைந்தால் அழிந்து விடுவீர்கள் என்று ஜெயலலிதா அன்றே சொன்னார். காங்கிரசார் கேட்கவில்லை. ஆனால் தி.மு.க.வால் காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகி விட்டது. பத்திரப் பதிவு தடை நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறியவுடன் உடனடியாக தடை நீக்கம் செய்துள்ளனர். அதனையும் அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் செய்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனை 2 தினங்கள் கழித்து அறிவிக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி, குணசேகரன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். மன்றம் தேர்போகி பாண்டி, இளைஞரணி பூராவயல் ராமு, சின்னையா அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, பொதுக்குழு உறுப்பினர் ஜாக்குலின் அலெக்ஸ், ஒன்றிய இளைஞரணி செயலர் ரவிச்சந்திரன், குழந்தை வேலு, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அய்யாசாமி, நாகலிங்கம், பூப்பாண்டியன், கவுன்சிலர்கள் அங்குராஜ், சேதுபதி, அருள்முருகன், கணேசன், கல்லல் ரவி, நல்லதம்பி, ராமு, தென்கரை சுப்பிரமணியன், அரியக்குடி மோகன், செல்லையா, குணசேகரன், ஆனந்தன், காளையார்கோவில் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் மெய்யப்பன், புதுவயல் நைனாமுகமது, சிவகங்கை ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சங்குபாண்டி, அண்ணாநகர் சுப்பிரமணி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிரஞ்சீவி சீனிவாசன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.