எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி,மார்ச். - 2 - தமிழ்நாட்டில் நிலவும் மோசமான நிலையை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காளிதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோகுல இந்திரா பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் இமாலய ஊழலால் இந்தியா உலக அளவில் தலைகுனிய நேரிட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்றடைந்தது தெள்ளத் தெளிவாகி விட்டது. முதல்வர் பதவியில் இருக்கும் கருணாநிதி தன் குடும்ப சுகத்திற்காக மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் முதலிடம் வகித்த தமிழகம் இன்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. தினமும் கொள்ளை, கொலை, லஞ்சம், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என தமிழக மக்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.
காரைக்குடியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பத்திரப் பதிவு நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குவதற்கு இப்பகுதி வாழ் மக்களுடன் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. தடைபட்ட காலம் முதல் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் செய்தவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இத்தொழில் முற்றிலுமாக இப்பகுதியில் நலிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் வரப் போகிறது என்ற காரணத்தினால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் நின்றாலும் வர முடியாது என்ற எண்ணத்தால் இப்பகுதியில் பத்திரப் பதிவு தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
காங்கிரசார் தி.மு.க.வுடன் இணைந்திருக்க வேண்டாம். அப்படி இணைந்தால் அழிந்து விடுவீர்கள் என்று ஜெயலலிதா அன்றே சொன்னார். காங்கிரசார் கேட்கவில்லை. ஆனால் தி.மு.க.வால் காங்கிரஸ் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகி விட்டது. பத்திரப் பதிவு தடை நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறியவுடன் உடனடியாக தடை நீக்கம் செய்துள்ளனர். அதனையும் அமைச்சர் ப. சிதம்பரமும், எம்.எல்.ஏ சுந்தரமும் செய்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனை 2 தினங்கள் கழித்து அறிவிக்க முடியாது என்ற காரணத்தால் உடனடியாக செய்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சோழன் சித பழனிச்சாமி, குணசேகரன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உமாதேவன், கற்பகம் இளங்கோ, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். மன்றம் தேர்போகி பாண்டி, இளைஞரணி பூராவயல் ராமு, சின்னையா அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் மந்தக்காளை, பொதுக்குழு உறுப்பினர் ஜாக்குலின் அலெக்ஸ், ஒன்றிய இளைஞரணி செயலர் ரவிச்சந்திரன், குழந்தை வேலு, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அய்யாசாமி, நாகலிங்கம், பூப்பாண்டியன், கவுன்சிலர்கள் அங்குராஜ், சேதுபதி, அருள்முருகன், கணேசன், கல்லல் ரவி, நல்லதம்பி, ராமு, தென்கரை சுப்பிரமணியன், அரியக்குடி மோகன், செல்லையா, குணசேகரன், ஆனந்தன், காளையார்கோவில் பழனிச்சாமி, நகர செயலாளர்கள் மெய்யப்பன், புதுவயல் நைனாமுகமது, சிவகங்கை ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சங்குபாண்டி, அண்ணாநகர் சுப்பிரமணி, வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சிரஞ்சீவி சீனிவாசன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


