எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 2- தருமபுரி, சேலம் கோட்டப் போக்குவரத்து தொழிலாளர்கள் 1300 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரிசேலம் கோட்டத்திற்கு 2007ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தமிடிநநாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான நேர்காணலுக்குத் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் பணிக்கப்பட்டனர். வண்ணக் கனவுகளுடன் தங்களின் படிப்பு, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு
நேர்காணலுக்குச் சென்றவர்களுக்குப் பேரிடியாக ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குச் சில இலட்சங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பணத்தைச் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சிப் புள்ளியிடம் கட்டி இரசீது காண்பித்தால் வேலை உறுதி என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது.
வறட்சியினால் பின்தங்கிய மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர். இருப்பினும் எதிர்காலம் கருதி தங்களின் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாக நவீன வேதாளமான ஆளும் தரப்பை நிறைவு செய்ய தத்தம் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு சண்டையிட்டும், பலர் வட்டிக்குப் பணம் வாங்கியும், தங்களுக்குச் சொந்தமான வீட்டையும், நிலத்தையும் விற்றும், சிலர் தங்கள் மனைவியின் நகை, தாலியை விற்றும் ஒருவழியாக அதிகார வர்க்கத்தினரிடம் பணத்தைக் கட்டினர்.
2007ஆம் ஆண்டு 1300 பேர் வேலைக்குச் சேர்வதற்கு அரசாணையும் 240 பணி நாட்களுக்குப் பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் பணியில் சேர்ந்து ஆண்டுகள் நான்கு உருண்டோடின. பல 240 நாட்கள் பணி செய்த பின்பும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்ற இந்த நாள்வரை அவர்கள் பணி
நிரந்தரம் செய்யப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர். 01 மார்ச் 2011
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மாறாக, முன்னின்று கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பணி nullக்கம் செய்வதும், இடமாற்றம் செய்வதுமாக அலைகழிக்கப்பட்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வா சாவா என்ற நிலையில் 25.02.2011 வெள்ளிக்கிழமை
தொடங்கி கடந்த ஐந்து நாட்களாகத் தம் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இருந்து வருகின்றனர். இதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை மிரட்டுகிறது. ஒலிபெருக்கி அனுமதி வழங்காமல் அவமதிக்கப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா
என்று எண்ணும் நிலையில் தருமபுரி அரசு போக்குவரத்துத் தலைமை அலுவலகத்தின் எதிரே சாலை ஓரத்தில் சாமியானா பந்தலிட்டு நியாயம் வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் மொரப்nullர் இரமேஷ், நண்டுகாரம்பட்டி சண்முகம், ஊத்தங்கரை வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை அரசுத் தரப்பில் போராடி வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேலை வழங்கியதற்கு கையூட்டு இலஞ்சம் வாங்கியும் பணி நிரந்தரம் வழங்காதது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. இதுதான் அரசு போக்குவரத்துத் துறை இயங்கும் இலட்சணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று இந்த அரசின் சார்பில் இதுவரை கையூட்டு லஞ்சம் பெற்று பணிகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கு இருக்கிறது. விரைவில் ஆட்சி மாறும்; அப்போது காட்சிகளும் மாறும். இதுபோன்ற லஞ்சம் வாங்கி மோசடி செய்தவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். எனவே, தாமதம் இன்றி தருமபுரிசேலம் கோட்டப் போக்குவரத்துப் பணியாளர்கள் 1300 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


