எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி--ஜூலை.23 - திருச்சியில் ரூ.30கோடி மதிப்புள்ள ஹோட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன், அமைச்சரின் தம்பி ராமஜெயம் ஆகியோர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ள நிலையில் ஹோட்டல் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசிய சிடி ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் நேரு கைதாக கூடும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களில் பல்வேறு தி.மு.கவினர் தொடந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவரது தம்பியும் தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான மு.அன்பழகன் ஆகிய மூன்று பேர்கள் மீது ரூபாய் 30 கோடி மதிப்பிலான திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு ஹோட்டலை அபகரித்ததாக நாமக்கலைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி மாநகரில் போலீசில் புகார் கொடுத்தார்.
இது குறித்து திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர் மாசாணமுத்து உத்திரவின் பேரில் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாருடன் அதற்கான ஆதாரங்களையும் வாங்கி போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கெனவே டாக்டர்.கதிர்வேல் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காஞ்சனா பிளாசா ஹோட்டலை 30 கோடி மதிப்பீட்டில் நான் கிரைய ஒப்பந்தம் செய்தேன். அதை தொடர்ந்து ஹோட்டலை நானே நிர்வாகித்து வந்தேன். இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் அடியாட்கள் ஆயுதங்களுடன் வந்து என்னை மிரட்டி ஹோட்டலை விட்டு அனுப்பி விட்டனர். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த ஹோட்டலையும் அபகரித்து கொண்டனர். இப் பிரச்சினையில் திருச்சியில் பணியாற்றிய ஒரு போலீஸ் அதிகாரி தொடர்பு இருக்கிறது. எனவே, நான்கு பேர்கள் மீதும் நடவடிக்கை எடுத்த எனது ஹோட்டலை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதனிடையே முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவில் ஏற்கெனவே இது போன்று ஒரு புகாரை டாக்டர்.கதிர்வேல் திருச்சி போலீசில் கொடுத்திருந்தார். அதனை விசாரித்த காவல் துறையினர் அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என்று புகாரை முடிவுக்கு வந்தனர். மீண்டும் அதே குற்றச்சாட்டில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய் புகார் எனவே எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கே.என்.நேரு, அன்பழகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க கே.என்.நேரு, தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், துணைமேயர் அன்பழகன் ஆகியோர் மீது
கூறப்பட்டுள்ள ஹோட்டல் அபகரிப்பு புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
கடந்த 2007ல் திருச்சி கன்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், டாக்டர் கதிர்வேலுடன் செல் போனில் பேசியது தொடர்பான மூன்று சி.டிக்களை புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சிடியில் டாக்டர் கதிர்வேலுக்கு சொந்தமான ஹோட்டலை முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது தம்பி ராமஜெயமும் வாங்க விரும்புவதாகவும் எனவே, அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு ஹோட்டலை விட்டு விடவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் பேசியுள்ளதாக அந்த சிடியில் பதிவானதாக கூறப்படுகிறுது. அந்த சிடியை ஆய்வு செய்த திருச்சி மாநகர போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனின் குரல் தானா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு போலீசாரை தயார் செய்து இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனிடம் செல் போனில் பேச வைத்து அந்த பேச்சை வேறு ஒரு சிடியில் பதிவு செய்தனர். பின்னர் இரண்டு சிடிக்களையும் ஒப்பிட்டு பார்த்த் போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் குரல்தான் அது என்பதை உறுதி செய்து கொண்டனர். தற்போது இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சென்னை வீராபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.
டி.எஸ்.பி சுவாமிநாதனை திருச்சி போலீசார் திருச்சி வரவழைத்து அவரிடம் போலீஸ் கமிஷனர் மாசாணமுத்து, துணை போலீஸ் கமிஷனர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணையில் சிடி தொடர்பாகவும், ஹோட்டல் அபகரிப்பு விவகாரம் தொடர்பகாவும் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை சூடு பிடித்துள்ளது. எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துணைமேயர் அன்பழகன் ஆகியோரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யக்கூடும் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும், ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது. ஹோட்டல் அபகரிப்பு தொடர்பாக மூன்று பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரகசியமாக வைத்துக்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-06-2025.
20 Jun 2025 -
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? - அதிபர் ட்ரம்ப் விரைவில் முடிவு
20 Jun 2025வாஷிங்டன் : அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள
-
ஈரான் எங்களிடம் எந்த ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை : பாகிஸ்தான் அரசு விளக்கம்
20 Jun 2025இஸ்லாமாபாத் : ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்.
-
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் புது பைக்குகளுடன் 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்: மத்திய அரசு
20 Jun 2025புதுடெல்லி, வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏ.பி.எஸ்.
-
பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
20 Jun 2025சென்னை : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
சிறுபான்மையினருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jun 2025சென்னை : சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணத்தை தராமல் இழுத்தடிப்பதா? - தமிழக அரசுக்கு த.வெ.க. கண்டனம்
20 Jun 2025சென்னை : ரூ.
-
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து
20 Jun 2025சென்னை : தேர்தல் பிரச்சாரத்தின் போது 4 நிமிடங்கள் கூடுதலாக பேசியதாக வி.சி.க.
-
ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்க தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷ்யா
20 Jun 2025மாஸ்கோ : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்
-
தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
20 Jun 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 Jun 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
ரேஷன் கடைகளில் ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு போதும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
20 Jun 2025சென்னை : ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா: இ.பி.எஸ்., ராமதாசை சந்திக்க திட்டம்
20 Jun 2025சென்னை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
-
ஏழைகள் சமமாக நிற்பதை பா.ஜ. விரும்பவில்லை: ராகுல்
20 Jun 2025புதுடில்லி : ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியு
-
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
20 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
20 Jun 2025சென்னை, ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
-
போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் பதிவு
20 Jun 2025சென்னை, பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
20 Jun 2025புதுடெல்லி : ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரெளபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
20 Jun 2025சென்னை : தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.;
-
திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
20 Jun 2025சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
-
போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்: முதல்முறை பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்
20 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒ
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
20 Jun 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
மதுரை முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்
20 Jun 2025மதுரை, முருக பக்தர்கள் மாநாட் டுக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்..? - உளவுத்துறை எச்சரிக்கை
20 Jun 2025ஜம்மு : அமர்நாத் யாத்திரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிவு
20 Jun 2025புதுடெல்லி : ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.