எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் வந்துள்ளதால் ஐவர் குழுவிற்கு கல்தா கொடுத்து விட்டு டெல்லியிலிருந்து குலாம்நபி ஆசாத் நேரடியாக வந்து கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி, ஒற்றுமையின் சின்னம் என்று பேசப்பட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இருதரப்பும் குழுக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தின. இதில் பல்வேறு குத்து வெட்டுக்கள் , முட்டல் மோதல்கள் முரண்பாடுகள் வெடித்தது.
ஒப்புக்கு சப்பாணி ஐவர் குழு இரண்டு மூன்று முறை டெல்லி சென்று சோனியா, ராகுலிடம் ஆலோசனை பெற்று வந்தது. காங்கிரஸ் 78 இடங்களுக்கு மேல் கேட்டது. ஸ்டியரிங் கமிட்டி துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என நெருங்கியது.
தி.மு.க. காங்கிரசுக்கு நெருக்கடி தர பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்து 31 இடங்களை கொடுத்து இது மேலும் பிரச்சினையை பெரிதாக்கிவிட்டது. பா.ம.க.வுக்கு 31, விடுதலை சிறுத்தைகளுக்கு 10 மற்ற சிறு கட்சிகளுக்கு 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கொடுத்த தி.மு.க. மீதமுள்ள 188 இடங்களில் காங்கிரசுக்கு 78 இடங்களை கொடுத்து தி.மு.க. 110 தொகுதிகளில் போட்டியிட்டால் மெஜாரிட்டி தொகுதிக்கு 118 இடங்கள் வேண்டும். 110 தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் கண்டிப்பாக காங்கிரஸ் தயவை நம்பவேண்டிய நிலை தி.மு.க.வுக்கு வந்துள்ளது. இதனால் தி.மு.க. தரப்பிலும் இழுத்து பிடித்தபடி இருந்தனர். கூட்டணியே உடையும் கட்டத்தினை அடைத்தது. ஆனால் காங்கிரஸ் தயவு இல்லாமல் வெளியே வந்ததால் பிரச்சினை என்பதால் கருணாநிதி பொறுத்து கொண்டு தனது எண்ணத்தை தி.க.வீரமணி மூலம் அறிக்கையாக வெளியிடவைத்தார்.
இந்நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மொத்தம் 40 நாட்களே உள்ளதால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. காங்கிரஸ் உடனே ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐவர் குழுவுக்கு கல்தா கொடுத்துவிட்டு மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தை சோனியா டெல்லியிலிருந்து பேச்சுவார்த்தை நேற்று அனுப்ப முடிவெடித்துள்ளார். குலாம்நபி ஆசாத் நேரடியாக கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் கட்டாயம் தொகுதிகளை இறுதிபடுத்தி ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 60 தொகுதிகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் தி.மு.க. 118 தொகுதிகளில் நிற்காமல் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


