எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிம்பா
சிம்பா
பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ’சிம்பா’. இதன் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றது.
பிரேம்ஜி சிம்பாவில் ஒரு மிக முக்கியமான வேடமேற்று நடித்திருக்கின்றார்.
பிரேம்ஜியின் முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட,, குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான வேடத்தை கொண்ட கதையாக சிம்பா இருந்ததனால், அவர் ஆர்வத்துடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகம் இதுவரை பார்த்திராத வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் இருந்து இயங்கும் சிம்பாவின் கதையமைப்பு நிச்சயம் தமிழ் சினிமா உலக ரசிகர்களின் ரசனை எல்லையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல, அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY’ GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்
தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும்படியாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், சிம்பா COMPLETE STONER MOVIE.
நடிப்பு நடனம் என எல்லா திறமைகளும் சிறப்பாக கைவரப் பெற்றிருந்தாலும் ஹீரோ பரத்திற்கு அவரது நடிப்புத் திறமையின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரும் இன்னொரு சாட்சியாக சிம்பா திரைப்படம் நிச்சயம் இருக்கும்.
சிம்பாவின் வரவுக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் பரத்திற்கு தங்கள் மனதில் நிச்சயம் ஒரு புதிய சிம்மாசனம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள்.
ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர் ஒளிப்பதிவில் பிரத்யேக உபகரணங்களை இறக்குமதி செய்தும், புதிய உபகரணங்கள் பலவற்றை உருவாக்கியும் பயன்படுத்தும் தனித்துவமானவர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 5 நிமிட காட்சி, 100 கேமராக்கள் கொண்டு எடுக்கப்படும் ஒரே ஷாட், என்று வெரைட்டியாக மிரட்டுகிறார்.
இந்த சிம்பா கதையினை பொறுத்தவரை இயக்குனருக்கும் இவருக்குமான ஒரு சிறப்பு புரிதல்தான் இந்ததிரைப்படத்தின் பலமே. கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களில் இவர் நிச்சயமாக ஸ்பெஷல்தான். இனி இவரை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் காம்பினேஷனில் நிச்சயமாக பார்க்கலாம்.
கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த வருடு பட நாயகி பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரமணாவும் நடித்திருக்கிறார்கள். தமிழுக்கு புதுவரவாக ஸ்வாதி தீக்ஷித் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
பவர்ஸ்டார், லோள்ளுசபா ஸ்வாமிநாதன் என காமெடி நடிகர்களும் சில காட்சிகளேயானாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சிறப்புத்தோற்றத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும், மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா ஹீரோயினும் நடிக்க இருக்கின்றனர். ஹீரோயின் யார் என்பது சஸ்பென்ஸ்.
இசை விஷால் சந்திரசேகர்,, அப்புச்சி கிராமம் உட்பட விரைவில் வெளியாகவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர். சிம்பா கதைவிவாதத்தில் ஆரம்பம் முதலே பயணிப்பவர், இயக்குனரின் நெருங்கிய நண்பர். இந்த படத்தில் இயக்குனர் தனக்குக் கொடுத்த சுதந்திரம் தன்னை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக சந்தோஷப்படுகிறார்.
மெட்ராஸ், வி.ஐ.பி படங்களில் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்த சதீஷ் சிம்பாவிலும் தனது முத்திரையை பதிப்பார்.
தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர் படத்திற்கு தேவையான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் முழு ஈடுபாடுடன் தாராளமாக செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பரீட்சார்த்தமாக செய்துப்பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களில் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தும் படமாக சிம்பா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
இமானுவேல் - தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9 முதல் தடை உத்தரவு
04 Sep 2025ராமநாபுரம்: இனானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வருகிற 9-ம் தேதி முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.