எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குவஹாத்தி, ஆக.7 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின்கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்த விளையாட்டுப் போட்டியின் அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து மத்திய கணக்கு தணிக்கைக் குழு நேற்று முன்தினம் ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் இதற்கு போட்டி அமைப்பாளர் சுரேஷ் கல்மாடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரே பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கோரிக்கை விடுத்துள்ளார். அசாம் தலைநகர் குவகாத்தியில் நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சுரேஷ் கல்மாடி ரூ. 12 ஆயிரம் கோடிக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
மத்திய கணக்கு தணிக்கைக் குழு இடித்துரைத்தும் கூட தாங்கள் தவறு செய்யவில்லை என்று டெல்லி மாநில அரசு கூறியுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. அரசியல் சாசனத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மத்திய கணக்கு தணிக்கைக் குழுவே நேரடியாக இந்த குற்றச்சாட்டை கூறியுள்ள போதிலும் தாங்கள் தவறு எதையும் செய்யவில்லை என்று டெல்லி மாநில அரசு எப்படி கூற முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முறைகேட்டில் நேரடியாக தொடர்புடைய ஷீலா தீட்சித் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது. எனவே அவர் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி தெரிவிக்கையில் கணக்கு தணிக்கைக் குழு ஊழல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆன செலவை குறைத்திருக்கலாம் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் பதவி விலக தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பிரச்சனையை பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.