எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,மார்ச்.4 - லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மேலும் ஒரு விமானப்படை விமானம் அனுப்பி வைக்கப்படுகிறது. லிபியாவில அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு கலவரம் மூண்டுள்ளது. இதனால் லிபியாவில் தங்கி தொழில் செய்து வரும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகிறார்கள். லிபியாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை அழைத்து வர மும்பையில் இருந்து கப்பல்களும், டெல்லியில் இருந்து விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எகிப்து அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் இருந்து ஆயிரத்து 185 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இந்திய கப்பல் புறப்பட்டது. லிபியாவின் பல்வேறு இடங்களில் இந்தியர்கள் அவர்களை தலைநகர் திரிபோலிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை எகிப்து நாட்டின் வழியே இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விமானப் படை விமானம் அனுப்பப்பட உள்ளது. மற்ற நாட்டினர் அனைவரும் திரும்பி விட்ட நிலையில் இந்தியர்கள் மட்டுமே லிபியாவில் இருப்பதால் அவர்களை அழைத்து வர ஏர் இந்தியா விமானங்களும், விமானப் படை விமானங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


