Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் - பெகூராவின் ஜாமீன் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.12 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரி சித்தார்த்த பெகூராவின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது உதவியாளர்களான சித்தார்த்த பெகூரா, சந்தோலியா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் முன்னாள் அதிகாரி சித்தார்த்த பெகூரா தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஐகோர்ட்டு நீதிபதி அஜித் பாரிகோஹி விசாரணை நடத்தினார். தொலைத் தொடர்பு துறை முறைகேட்டில் பெகூராவிற்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதி அஜித் பாரிகோஹி கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago