Idhayam Matrimony

2 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.19 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. 3 வது குற்றப்பத்திரிக்கையை தயாரித்து வருகிறது. அதன் பிறகு மேலும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் பண பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் லூப் டெலிகாம் நிறுவனத்தின் 2 கிளை நிறுவனங்கள், அன்னிய செலவாணி விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன் மூலம் ரூ. 384 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஆவணங்களை அமலாக்கப்பிரிவினர் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே லூப் டெலிகாமில் இருந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ. 4,300 கோடி அளவுக்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago