எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 5 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகம்,புதுவை, கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் இந்த 5 மாநிலங்களிலும் வரும் மே மாதம் 13-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சியான அ.தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. அதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வும் ஆரம்பமாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு அடுத்து கல்லூரி தேர்வும் நடக்கவுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இரவும் பகலும் தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரம் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மோட்டார் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது ஏற்படும் சத்தத்தால் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவர்கள் படிப்புக்கு தடையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு தினமாகும். அன்றைய தினத்தை கொண்டாட உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். இதனையொட்டி இடம் பெயரும்போது தேர்தலின்போது மக்கள் சரியானபடி வாக்களிக்க முடியாமல் போய்விடும். இதை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுதல் மற்றும் தில்லுமுள்ளு நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக்த்தில் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டசபை காலம் மே 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 13-ம் தேதிதான் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. மே.16-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைவெளி இருப்பதோ வெறும் இரண்டு நாட்கள்தான். இந்த இரண்டு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்கள் முதல்வரை தேர்ந்தெடுத்து, கவர்னரையும் சந்திக்க வேண்டும். இதற்கு போதிய காலவகாசம் இருக்காது. அதனால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கோரியுள்ளார்.
இடது கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா,ஜ. தலைவர்களும் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே கட்சி ஆட்சி செய்கிறது. இதையும் பரிசீலைனை செய்துதான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்,ஒய். குரேஷி நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று குரேஷி கூறினார். தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் நிலவும் சூழ்நிலை குறித்து தேர்தல் கமிஷன் பலமுறை விரிவான முறையில் ஆராய்ந்தது. அதன் பின்னர்தான் கடந்த செவ்வாய்கிழமை தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் பல முறை உட்கார்ந்து தெளிவாக ஆய்வு செய்து கணக்கில் கொண்டோம். அதேமாதிரி இதர மாநிலங்களான அசாம், மேற்குவங்காளம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களிலும் அனைத்தையும் ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர்தான் தேர்தல் நடத்தப்படும் தேதியை அறிவித்தோம். அதனால் முதலில் அறிவித்த தேதியிலேயே தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று குரேஷி தெரிவித்தார்.
தேர்தல் தேதியை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குரேஷி தேர்தலை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்டென்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.