எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.- 1 - அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்தபின்னர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வுவெடுத்துவரும் சோனியா காந்தி இம்மாதம் 2 வது வாரத்தில் டெல்லி திரும்புகிறார். சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருந்ததாக கூறப்பட்டது. இதற்காக உலகிலேயே மிகவும் பிரபலமான நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்துவந்தார். சோனியாகாந்தி இம்மாதம் இரண்டாவது வாரத்தில் டெல்லிக்கு திரும்புவார் என்று தகவல்கள் கூறுகின்றன. டெல்லி திரும்பினாலும்கூட அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகிறது. அதுவரை அவரால் அமைக்கப்பட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழுவே கட்சிப் பணிகளை கவனிக்கும் என்று தெரிகிறது. சோனியாகாந்தி இல்லாத நிலையில் அன்னா ஹசாரே விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசும் காங்கிரசும் கடுமையாக திணறிப் போய்விட்டன. மேலும் மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


