எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 6 - தொலைதொடர்புத்துறை முன்னாஏள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் வந்தவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிலும் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றது தெரிய வந்தது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி திடீரென்று மாற்றப்பட்டது. தகுதியற்ற சில நிறுவனங்கள் உரிமம் பெற்றன. பல வங்கிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டன. அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமாக அரசுக்கு அதிகப்பட்சமாக ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைவரிசை ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவும் இதனை விசாரித்து வருகிறது. அலைவரிசை ஊழல் குறித்து விசாரணை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ தலைமையில் 30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியலிட்டீஸ் அதிபர் சாகித் உஷ்மான் பல்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். எடிசலாட் டிபி, யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. தனது கூர்மையான பார்வையை பதித்துள்ளது. எடிசலாட் நிறுவனத்திற்கு பல்வா அதிபர் என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறுபல பெரும் பல பெரும் புள்ளிகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. யூனிநார் நிறுவனம் நார்வே நாட்டுடன் தொடர்புடையது. லூர் நிறுவனம் எஸ்.ஆர். குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்துள்ளது. பல பகை நாடுகளின் பின்னணியில் பல தொலைபேசி நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்த நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பது சி.பி.ஐ.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க பிரிவு அதிகாரிகள் அலைவரிசை தொடர்பான விவகாரங்களை புலனாய்வு செய்ய தீவிரம் கொண்டுள்ளன. இதுவரை 63 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை தொலைபேசி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மட்டுமல்லாமல் சில எம்.பி.க்களும் அடங்குவர். 70 சதவீத புலனாய்வு பணி நிறைவு பெற்றதால் இம்மாதம் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பகை நாடுகளின் பங்கு இந்த அலைவரிசை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆ.ராசா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூர்மையாக பரிசீலனை செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராசா தெரிந்தேதான் இந்த நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ. 3 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. புலனாய்வு வாயிலாக கண்டறிந்துள்ளது. இந்த பணம் உள்நாட்டில் மட்டுமல்லாது 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுகுறித்து அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் சில பெரும் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ.வட்டாரம் தெரிவிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.