எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.7 - பல கோடி ரூபாய் பண மோசடி செய்து அதை திருப்பிக் கேட்ட தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வடசென்னை தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு, சன்பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன், வி.எஸ்.பாபு அண்ணன் மகன் தினகரன் ஆகியோர் மீது சினிமா இயக்குநர் சக்தி சிதம்பரம் சென்னை மாநகர காவல் கமிஷனரிடம் புகார் அளித்தார். நேற்று சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இயக்குநர் சக்தி சிதம்பரம் வந்து கமிஷனர் திரிபாதியை சந்தித்து 2 புகார்களை அளித்தார். அதில் ஒரு புகாரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளருமான வி.எஸ்.பாபு மற்றும் அவரது அண்ணன் மகன் ஜெ.தினகரன் ஆகியோர் மீதும், மற்றொரு புகார் சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீதும் அளித்தார்.
முதல் புகாரில் சக்தி சிதம்பரம் தெரிவித்திருப்பதாவது:-
சன் பிக்சர்ஸ் எடுத்து இயக்குநர் சங்கர் இயக்கி ரஜனிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் செங்கல்பட்டு ஏரியாவில் 8 திரையரங்குகளில் திரையிடும் உரிமையை ரூ.4 கோடி கொடுத்து நான் பெற்றேன். இதை கேள்விபட்டு தன்னை அணுகிய வி.எஸ்.பாபு, தனது அண்ணன் மகன் ஜெ.தினகரன் சினிமா தொழில் செய்ய விருப்பம் உள்ளதால் அவரை எந்திரன் பட விநியோகத்தில் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். செல்வாக்கு மிக்க பிரமுகர் என்பதால் சக்தி சிதம்பரம் எதுவும் சொல்லாமல் ஒத்துக் கொண்டுள்ளார்.
அதன்பின் படத்தின் வரவு- செலவு கணக்கையும் தினகரனே பார்த்துள்ளார். இதனிடையே சக்தி சிதம்பரத்தின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான 23 1ற2 சென்ட் நிலம் சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ளது. ஒரு வங்கியில் ரூ.85 லட்சத்திற்கு அடமானத்தில் இருந்துள்ளது. இந்த நிலத்தை மீட்டு உரிய விலைக்கு விற்க சக்தி சிதம்பரத்திற்கு அவரது உறவினர்கள் அதிகாரம் அளித்துள்ளனர். இந்த அடமான நிலம் பற்றி ஜெ.தினகரனிடம் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். உடனே தினகரன் எங்கள் தொழிலே அதுதான், அடமான நிலத்தை மீட்டு விற்றுத் தருவதுதான் எங்கள் வேலை என்று கூறியுள்ளார்.
பின்பு சக்தி சிதம்பரத்திடம் வி.எஸ்.பாபு கோஷ்டியினர் ரூ.4 கோடிக்கு அந்த நிலத்தை விலை பேசி உள்ளனர். முதலில் ரூ.85 லட்சத்தை சக்தி சிதம்பரத்திடம் கொடுத்து நிலப்பத்திரத்தை மீட்டு வரும்படி கூறியுள்ளனர். பத்திரப்பதிவு நடைபெறும்போது மீதி தொகையை தருவதாக கூறியுள்ளனர். சொன்னபடி சக்தி சிதம்பரம் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி ரூ.3 கோடியே 15 லட்சத்தை தராமல் வி.எஸ்.பாபு, தினகரன் கோஷ்டியினர் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுபற்றி சக்தி சிதம்பரம் நிலத்துக்கான பணம் ரூ.3 கோடியே 15 லட்சம் மற்றும் எந்திரன் விநியோகம் சம்பந்தமான வரவு பணத்தையும் சரிபார்த்து பணத்தை ஒப்படைக்கும்படி வி.எஸ்.பாபு மற்றும் தினகரனிடம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கிடையாது, பணத்தை கேட்டால் உங்கள் எல்லோரையும் தொலைத்துக் கட்டி விடுவேன். துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், எனக்கும் உள்ள உறவு உனக்கு தெரியாதா? சினிமா துறையில் இதுவே உனது கடைசி வியாபாரமாகி விடும் என்று மிரட்டி அனுப்பி விட்டனர்.
இதன்பின்பு இதைப்பற்றி யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்தவர் அ.தி.மு.க. ஆட்சி வந்ததால் நிலமோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அறிவித்து அதற்கான தனி துறையையே ஏற்படுத்தியதையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க எண்ணிய சக்தி சிதம்பரம் நேற்று முன்தினம் மீண்டும் ஒருமுறை வி.எஸ்.பாபுவிடம் பேசி பார்த்துள்ளார். பணத்தை தராவிட்டால் புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார். புகார் அளிக்க வேண்டாம், பணம் தருகிறோம் என்ற தினகரன் அலுவலகத்திற்கு வரவழைத்து கடுமையாக சக்தி சிதம்பரத்தை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து துரத்தியுள்ளனர்.
மேற்கண்ட சம்பவங்களை புகாராக எழுதி ரூ.5 கோடி சொத்தை ரூ.85 லட்சம் கொடுத்து அபகரித்த நிலத்தை திரும்ப தரவும், எந்திரன் படத்தின் முதலீடான அசல் தொகை ரூ.4 கோடியை திரும்ப தர வேண்டும் என்று கேட்டு கமிஷனரிடம் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் இரண்டாவது புகாரில் எந்திரன் படத்தை 8 தியேட்டர்களில் வெளியிட உரிமம் அளித்து சன்பிக்சர்ஸ் சக்சேனா ரூ.4 கோடி வாங்கிக் கொண்டு 7 தியேட்டர்களுக்கு மட்டும் உரிமம் அளித்துள்ளார். ரூ.1.50 கோடி வசூலாகும் முக்கியமான தியேட்டரை ஒப்பந்தப்படி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் சக்தி சிதம்பரத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாம். இதுபற்றி நஷ்ட தொகையை சக்தி சிதம்பரம் கேட்டபோது சக்சேனா, அய்யப்பன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மிரட்டி தாக்கி அனுப்பியுள்ளனர். இதுபற்றி தனது இரண்டாவது புகாரில் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
வி.எஸ்.பாபு மீதும், சக்சேனா மீதும் இயக்குநர் சக்தி சிதம்பரம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே புகாரை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜிடமும் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


