எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.8 - டெல்லி ஐகோர்ட்டு நுழை வாயில் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லி ஐகோர்ட்டு பகுதியில் நேற்று காலை வழக்கமான பணிகள் துவங்குவதற்கு முன்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்களை பெற்று 5-வது நுழைவாயில் வழியாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 10.15 மணிக்கு 5-வது நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதிக சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படையினர், போலீஸ் படையினர், மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த பகுதியில் மனிதர்களின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் சிதறி கிடந்தன. ஒரே ரத்தக் காடாக அந்த இடம் காட்சி அளித்தது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் உடனுக்குடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸ் கமிஷனர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். ஐகோர்ட்டில் நேற்று பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இது தீவிரவாதிகள் நடத்திய சம்பவம்தான் என்பதை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உறுதி செய்தார்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய உளவுத்துறை மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு வேறு இடங்களில் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்குகளில் தொடர்புடைய வர்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்குருவை விடுதலை செய்யாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்த தீவிரவாத குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவ மனை ( எய்ம்ஸ்) ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
குண்டு வெடிப்பு நடந்த இடம் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை வரிசையில் நின்று பெறுவதற்கான இடம் என்பதால் அங்கு அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில்தான் வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தை யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 25 ம் தேதி இதே ஐகோர்ட்டுக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது இரண்டாவதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குண்டு வெடித்தபோது மக்கள் இடையே பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். குண்டு வெடித்த பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் பலர் துடித்துக்கொண்டிருந்ததை தங்களால் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர். படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் அந்த மருத்துவ மனைகளின் முன்பு கூட்டமாக கூடி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
- கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? செங்கோட்டையன் பதில்
23 Jan 2026சென்னை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய இ.பி.எஸ்.
23 Jan 2026செங்கல்பட்டு, தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரனுடன் கை குலுக்கிய எடப்பாடி பழனிசாமி கை குலுக்கிக் கொண்டனர்.
-
குஜராத் போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சி: பிரதமர் மோடி
23 Jan 2026திருவனந்தபுரம், குஜராத்தை போல கேரளத்திலும் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்
23 Jan 2026சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மாணிக்கராஜா விளக்கம்
23 Jan 2026சென்னை, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது குறித்து மாணிக்கராஜா விளக்கம் அளித்துள்ளார்.
-
நாகாலாந்தில் நிலநடுக்கம்
23 Jan 2026நாகலாந்த், நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
-
வடக்கில் சரிசெய்துவிட்டு பிரதமர் தெற்கே வரட்டும்: காங்கிரஸ் கட்சி விமர்சனம்
23 Jan 2026திருவனந்தபுரம், வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பதிவு
23 Jan 2026புதுடெல்லி, தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறது என்றும் தி.மு.க அரசுக்கு விடை கொடுக்க தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம்
23 Jan 2026சென்னை, ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ஜனநாயகன் பட வழக்கில் வருகிற 27-ம் தேதி தீர்ப்பு
23 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
-
இன்று ம.நீ.ம.செயற்குழு கூட்டம்
23 Jan 2026சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
23 Jan 2026புதுடெல்லி, இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது.
-
திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை துவக்கி வைத்தார் பிரதமர்
23 Jan 2026திருவனந்தபுரம், திருவனந்தபுரம் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிம
-
திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம் அமையுமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
23 Jan 2026சென்னை, திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
-
3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ வளாகத்தில் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
23 Jan 2026சென்னை, ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மெட்ரோஸ் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Jan 2026- மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி
- திருச்சேறை சாரநாதர் விழா தொடக்கம்
- காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு
- திருமொச்சியூர், திருவாவடுதுறை, திருவானைக
-
இன்றைய ராசிபலன்
23 Jan 2026


