எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையில், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ{, மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையில் நேற்று (07.01.2017) நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வாய்வின் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டிணம், வடபாதி கோக்கேரி, மேலஉளுர், சொக்கானவூர், தாமரங்கோட்டை, அதிராம்பட்டிணம், சோலைக்காடு, ருத்ரசிந்தாமணி, ஈச்சங்கோட்டை நத்தம், பூதலூர், கோவில்பத்து ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து பத்திரிக்கையாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது,
இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்துள்ளதால், சம்பா, தாளடி பயிர் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன் காக்கும் அம்மாவின் அரசு மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் அந்தந்த அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைநிலங்களை நேரடியாக கள ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல்வர் அவர்களின் ஆலோசனையின்படியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகபொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2012-2013 ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்ட பொழுது மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் அரசு நிவாரணம் வழங்கியது போல் தற்போது நிவாரண உதவித் தொகையை தமிழக அரசு கண்டிப்பாக வழங்கும். அம்மா விவசாயிகளின் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதன்படி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும். என்றும் விவசாயிகள் நலன் காக்கும் அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன் காக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிவாரண உதவித்தொகை வழங்கும் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்கள்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் வறட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையிலும், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ{, மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்வாய்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்) சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெத்தினசாமி, ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள், கோபிநாதன், சூரியநாரயணன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் த.சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர் குருமூர்த்தி, ரவிச்சந்திரன், திருமால், கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


