எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கபட்ட பொது கிட்டங்கி அறை, பணியாளர்கள் ஓய்வறை , உயர் மின்னழுத்த மின்மாற்றி மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்களை திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், நாகர்கோவில், ஆவின் பாலக வளாகத்தில் ரூ. 32 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாம் உற்பத்தி பிரிவு மற்றும் பணியாளர்கள் ஓய்வறை கட்டிடங்களையும், ரூ. 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது கிட்டங்கி அறை, ரூ. 30 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்மின்னழுத்த மின்மாற்றி, வடசேரி, உழவர் சந்தையில் ரூ. 24 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும், குழித்துறை, வெட்டுமணி பகுதியில் ரூ. 7 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது:-
அம்மா 6-வது முறையாக பதவியேற்றவுடன், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, முதல் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். அதே போன்று, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயனடைய செய்யும்வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்கள். அவ்வழியாக செயல்படும் தமிழக அரசு, இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அம்மா அவர்களின் நல்லாசியுடன், சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு பால்வளத்துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
அம்மா பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, ஆவின்-ன் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கருணை ஓய்வ+திய திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள்.
அம்மா எந்தவொரு செய்தாலும் அதில் முழு வெற்றி பெறுவார்கள். ஏனென்றால், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எது தேவை என்பதை, நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர வழிவகை செய்துள்ளார்கள். குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள், சீருடைகள், இலவச பேரூந்து பயணஅட்டை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், அவர்களின் கல்வி உயர வழிவகை செய்துள்ளார்கள். மேலும், சுகாதாரதுறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம், அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம் போன்ற திட்டங்களின் மூலம், என்றும் மக்களின் பாதுகாவலனாக விளங்கிய, ஒரே முதலமைச்சர் அம்மா தான். பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக சமூக நலத்துறையின் மூலம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த தாலிக்கு 4 கிராம் தங்கம்; திட்டத்தை, மீண்டும் உயர்த்தி 8 கிரமாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் முழுவதுமாக பெற்று பயனடைய செய்கின்றவகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தியவர்; அம்மா
அம்மா ஜாதி, மதம் என்ற வேறுபாடில்லாமல், இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நேரத்தில், பள்ளி வாசலுக்கு இலவச அரிசி, கிறிஸ்துவர்கள் புனித பயணமான ஜெருசேலம் செல்வதற்கு மானியம் போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, அனைத்துத்துறைகளிலும் மிகபெரிய வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பால்வளத்துறை அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழக அரசு எடுத்த பெரும்முயற்சியினால், அதிக லாபத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால், கறவை மாடு வழங்கும் திட்டத்தின்மூலம், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஆகவே ஆவின் பால் என்பது, தாய்ப்பாலுக்கு இணையானது. இதில், கலப்படம் எதுவுமில்லை. மிகவும் உண்மையான நம்பிக்கை வாய்ந்த ஒரே நிறுவனம் ஆவின் மட்டும்தான். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆவின் ஒன்றியம் கடந்த 6 ஆண்டு காலமாக, தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது. குறிப்பாக 2015-16-ம் ஆண்டில் ரூ. 2.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. ஒன்றியம் மூலமாக சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு மானியமாக ரூ. 4.00 வீதம் மாதம் ஒன்றுக்கு 70 டன் வழங்கப்படுகிறது. தாது உப்பு கலவை 50 சதவீதம் மானியத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 கிலோ வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக, சங்கங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 80 காசுகள் வீதம் நிர்வாக செலவுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. மேலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.00 வீதம் ஊக்கத்தொகையும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அம்மா ஆவின் மூலம் பணியாற்றி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கருணை ஓய்வ+தியம் திட்டத்தினை அறிவித்தார்கள். அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 பணியாளர்களுக்கு கருணை ஓய்வ+தியமாக ரூ. 2.40 இலட்சம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் ஆவின் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ், 52 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, பின்னர் இதற்கு முன்பாக, 20 இலட்சம் லிட்டர் பால்உற்பத்தி இருந்தது. அம்மா அவர்களின் ஆட்சியில் 31 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் வர்த்தா புயலின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து, பொதுமக்களுக்கு மிகவும் இடைய+றாக இருந்தது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு சிறியளவிலான வாகனம் செல்ல முடியாத இடத்திலும், ஆவின் மூலம் பொதுமக்களுக்கு பால் விற்பனை சிறப்பாக செய்யப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நிலையங்களில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், என்றும் தமிழக அரசு, மக்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கும். எனவே, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில், பொதுமக்களாகிய நீங்கள் அ.இ.அ.தி.மு.க கட்சி வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவுத்தலைவர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட பால்வளத்தலைவர் அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பகவதிபெருமாள், வழக்கறிஞர்கள் ஞானசேகரன், பால ஜனாதிபதி, துணை பதிவாளர் (பால்பளம்) கஸ்தூரிபாய், ஆவின் பொது மேலாளர் சுந்தரமகாலிங்கம், துணை பால் ஆணையாளர் சண்முக ராஜ்குமார், என்.என்.ஸ்ரீஐயப்பன், நாஞ்சில்சந்திரன், ரெஜிஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.