எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு குளங்களிலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக எடுக்க அனுமதி வழங்க 23.02.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் எம்.ரவி குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பொது மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களின் சொந்த நோக்கத்திற்காகவும் விவசாய நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் அரசாணை எண் 233 (எம்.எம்.சி.2) தொழில்துறை நாள் 23.09.2015 இன் படி 1959 ஆம் வருடத்திய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் விதி எண் 12 (2) இல் விகுத்துள்ள புதிய வழிமுறைகளின்படி,தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய் குளம் ஆகியவற்றில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்த குளம் கண்மாய்களின் பட்டியல்கள் அனைத்து வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து பெறப்பட்டு 318 குளங்கள் கண்மாய்கள், மண் வண்டல் மண் சவுடு கிராவல்/ ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்தவை என அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. குளங்களின் பட்டியல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேற்படி குளங்கள் கண்மாயிலிருந்து பொது மக்கள் விவசாயிகள், தங்களின் சொந்த உபயோகத்திற்காக விவசாய தேவைகளுக்காக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி கொள்ளளவு 5 லாரிகள்) அளவிற்கு எந்தவித் கட்டணமும் செலுத்தாமல் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 23.02.2017 காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.குளம் அமைந்துள்ள கிராமம் மற்றும் குளம் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பட்டா மற்றும் கிராம கணக்குகள் பெற வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை குளத்திலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் இளநிலைப் பொறியாளரிடமும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் இருந்து மண் எடுக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, ஒன்றியப் பொறியாளர் உதவிப் பொறியாளரிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களும் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 23.02.2017 அன்று முகாமின் போது கலந்து கொள்வார்கள். தாலுகா அலுவலகத்திலேயே பொதுமக்கள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அனுமதி ஆணைகள் வழங்கப்படும். இந்த அனுமதி ஆணை 03.03.2017 வரை மட்டும் செல்லுபடியாகும்.பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பொதுமக்கள் விவசாயிகளுக்கு, மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக அதிகபட்சமாக 30 கன மீட்டர் (அதாவது 200 கன அடி 5 லாரி லோடு) வழங்கப்படும். குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத இடங்களில் மட்டும் துறையால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயின் இயற்கைத் தன்மை பாதிக்கப்படாமல் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் மண்/வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க வேண்டும்.குளம் கண்மாயில் மணல் இருப்பின் மணல் எடுக்க அனுமதி இல்லை. குளம் கண்மாயில் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித் துறையால் குறிப்பிடப்பட்ட பகுதி தவிர வேறு இடத்தில் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 23.02.2017 அன்று தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி எதிரொலி: பார்லி. இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தல்
21 Jul 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
21 Jul 2025மதுரை : விளையாட்டு போட்டிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
வங்காளதேச தலைநகர் டாக்காவில் பயங்கரம்: பள்ளியில் விமானம் விழுந்து 19 பேர் பலி
21 Jul 2025டாக்கா, வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.