எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.18 - வன்முறை, பதற்றமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17,19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேருராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. மதுரை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளராக பாக்கியநாதன், காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கவியரசு, பாஜக வேட்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 15 ம் தேதி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்களுக்காக வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீடித்தது. காலையிலேயே பெண்களும், முதியோர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்களும் சிரமத்தை பார்க்காமல் நடந்து வந்து வாக்களித்தனர். மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பதற்றமான வாக்கு சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதே போல் மதுரை மாநகராட்சிஆணையாளரும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் விறுவிறுப்பானது. அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 20 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு மதியம் 1.30 மணிக்கு 52 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் எந்த வன்முறையும், பதற்றமும் இன்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திமுக ஆட்சியில் வன்முறையான தேர்தல் - அதிமுக ஆட்சியில் அமைதியான தேர்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2006 ம் ஆண்டு இதே போல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் ஏராளமான வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களை போட்டனர். தெற்கு வாசல் பகுதியில் ஓட்டு போட வந்த ஒரு சமூகத்தினரை வேனில் ஏற்றி திருமண மண்பத்தில் வைத்திருந்து ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனுப்பினர். மேலும் போலீசாரை கையில் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் மதுரை மாநகராட்சி தேர்தல் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் தாதமதாக துவங்கிய வாக்குப்பதிவு
மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வந்தும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுபதிவு எந்திரத்தை சரிசெய்யாமல் தாமதப்படுத்தினர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.முத்துராமலிங்கம் 7 மணிக்கே வந்தும் 8 மணி வரை வாக்களிக்க முடியவில்லை. எந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின்பு மேயர் வேட்பாளருக்கான எந்திரம் சரியாகி ஓட்டுப்போட துவங்கியதும், வார்டு கவுன்சிலருக்கான எந்திரம் வேலை செய்ய வில்லை. இது குறித்து முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் புகார் செய்தார். இதன் பின்பு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


