எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,அக்.18 - வன்முறை, பதற்றமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17,19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேருராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. மதுரை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளராக பாக்கியநாதன், காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கவியரசு, பாஜக வேட்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 15 ம் தேதி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்களுக்காக வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீடித்தது. காலையிலேயே பெண்களும், முதியோர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்களும் சிரமத்தை பார்க்காமல் நடந்து வந்து வாக்களித்தனர். மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பதற்றமான வாக்கு சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதே போல் மதுரை மாநகராட்சிஆணையாளரும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் விறுவிறுப்பானது. அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 20 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு மதியம் 1.30 மணிக்கு 52 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் எந்த வன்முறையும், பதற்றமும் இன்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திமுக ஆட்சியில் வன்முறையான தேர்தல் - அதிமுக ஆட்சியில் அமைதியான தேர்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2006 ம் ஆண்டு இதே போல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் ஏராளமான வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களை போட்டனர். தெற்கு வாசல் பகுதியில் ஓட்டு போட வந்த ஒரு சமூகத்தினரை வேனில் ஏற்றி திருமண மண்பத்தில் வைத்திருந்து ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனுப்பினர். மேலும் போலீசாரை கையில் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் மதுரை மாநகராட்சி தேர்தல் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் தாதமதாக துவங்கிய வாக்குப்பதிவு
மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வந்தும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுபதிவு எந்திரத்தை சரிசெய்யாமல் தாமதப்படுத்தினர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.முத்துராமலிங்கம் 7 மணிக்கே வந்தும் 8 மணி வரை வாக்களிக்க முடியவில்லை. எந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின்பு மேயர் வேட்பாளருக்கான எந்திரம் சரியாகி ஓட்டுப்போட துவங்கியதும், வார்டு கவுன்சிலருக்கான எந்திரம் வேலை செய்ய வில்லை. இது குறித்து முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் புகார் செய்தார். இதன் பின்பு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.