எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.19 - லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த வெள்ளி அன்று சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. அதில் ஏற்கனவே சோதனை நடத்தியது போக மேலும் ஒரு உறுப்பினர் வங்கி லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- தமிழ்நாட்டில் குரூப் -2, குரூப்- 3 பதவிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்வாணைய குழு உள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பான இதில் அலுவலர்களை நியமிப்பதில் இடைத்தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. பல் டாக்டர் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து முன்னாள் பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் செல்லமுத்து வீடு உட்பட 13 தேர்வாணைய குழு உறுப்பினர்களின் வீடுகளில் கடந்த அக்டோபர் 14 அன்று 150-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.க்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சியில் உள்ள ஒரு தேர்வாணைய குழு உறுப்பினர் இல்லம் உட்பட 15 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். தமிழ்நாடு கள பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.
இந்த சோதனையை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர். தேர்வாணைய குழு உறுப்பினர்களில் சிலர் கடந்த தி.மு.க. ஆட்சியில் மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும் வங்கி லாக்கர்கள் பற்றிய விபரங்களும் லாக்கர் சாவிகளும் கிடைத்தது.
கடந்த வாரம் சங்கரலிங்கம் என்ற தேர்வாணைய உறுப்பினரின் வங்கி லாக்கரை சோதனையிட்டபோது 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது. மேலும் சில ஆவணங்களும் சிக்கியது. இதேபோல் ராயப்பேட்டை ஜெகதாம்பாள் நகரில் வசிக்கும் மற்றொரு தேர்வாணைய குழு உறுப்பினரான டாக்டர் ரவி என்பவர் வீட்டிலும் வங்கி லாக்கர் பற்றிய விபரங்களும் சாவிகளும் கிடைத்தது. இந்த லாக்கர் ரவியின் மனைவியின் பெயரில் உள்ளது. இது ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனி லாக்கர் சாவியாகும். நேற்று இதுபற்றி விசாரிக்கவும், வங்கி லாக்கரை சோதனையிடவும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்றனர்.
டாக்டர் ரவியையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அதன்படி டாக்டர் ரவி வந்ததும் லாக்கர் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இந்த லாக்கரிலும் ஏராளமான தங்க நகைகளும், ஆவணங்களும் இருந்துள்ளது. இதுபற்றி டாக்டர் ரவியிடம் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளர் சுதாகர் விசாரணை நடத்தியபோது, அவர் தன் உழைப்பில் வாங்கியதாக ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல ஆவணங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தேர்வாணைய குழுவில் புரோக்கர்களாக செயல்படும் சிலருடைய லிஸ்டுகளும் சிக்கி உள்ளது. அதை வைத்து எவ்வளவு பணப்பரிமாற்றம் நடைபெற்றதுள்ளது என்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இவர்கள் மீது நேரடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. கிடைத்த ஆதாரங்களை வைத்து கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் போலீசார் ரெய்டு நடத்திய செல்லமுத்து உட்பட 14 தேர்வாணைய உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடிய விரைவில் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.