எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உங்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பிற்கு பிறகு நீங்கள் தேர்வு செய்து படிக்க பல்வேறு பணிவாய்ப்புகளை கொண்ட படிப்புகளை இங்கு பார்ப்போம்.
1) அறிவியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கான சிறந்த படிப்பு மற்றும் பணி வாய்ப்பு:
வணிகம், கலை மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் உங்களுக்கு விருப்பமான படிப்பில் விரைவான சேர்க்கையை பெறுவீர்கள். அறிவியல் பிரிவானது முக்கியமாக பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் பிரிவுகளில் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால் அப்படிப்புகளில் சேர்வதற்கு நீங்கள் தேர்வு செய்யும் கல்லூரி முக்கியமானதாகும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் நடத்தும் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
கலை மற்றும் வணிகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளின் வாயிலாக பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்ன படிப்பை படித்தாலும் பல நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கும் போட்டித்தேர்வுகளை எழுதுவது மிக முக்கியம். உங்களின் படிப்பை தேர்வு செய்கையில் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். மேலும் எங்கே அதிக வாய்ப்புகளும், வளர்ச்சியும் உள்ளன என்பதை மனதில் வைக்க வேண்டும்.
2) அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான படிப்புகள்:
மருத்துவ அறிவியல் பிரிவு, எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ், பி.பார்ம், பிபிடி, பிஎச்எம்எஸ், நர்சிங், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, பிஎஸ்சி இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி துணைநிலை மருத்துவ அறிவியல்கள். இவை தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, பயோமெடிக்கல், தாவரவியல், கணினிகள், உணவு தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம்சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் படிப்புகள், கால்நடை பராமரிப்பை உள்ளடக்கிய வேளாண் படிப்பு, கால்நடை அறிவியல், பால்பண்ணைத் தொழில் மற்றும் கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பி.எஸ்.சி படிப்பு மேற்கொள்ளலாம்.
3) பொறியியல் துறை வாய்ப்புகள்:
திறமையான மாணவர்களுக்கு பொறியியல் என்பது பிரகாசமான, எப்போதும் பணிவாய்ப்புகளை வழங்கும் பசுமையான துறையாகும். ஆனால் இன்றைய நிலையில் கல்வி வியாபாரத்தின் காரணமாக எங்கு பார்த்தாலும் பொறியியல் கல்லூரிகளாகவே உள்ளன. எனவே பொறியியல் படிப்பில் சேரும் முன்னதாக சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரம், தரம் குறித்து நன்கு ஆய்வு செய்வது முக்கியம். மேலும் பொறியியல் படிப்பை பொருத்தவரை செகண்டரி பீல்டை விட பிரைமரி பீல்டை தேர்வு செய்வதே சிறந்தது.
இதில் கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மெட்டலார்ஜிக்கல், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பாலிமர் இன்ஜினியரிங், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
4)வணிக பிரிவு மாணவர்களுக்கான படிப்புகள்:
சிபிடி (காமன் ப்ரொஃப்சின்சி டெஸ்ட்) எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சிஏவில் சேரலாம். படித்துக் கொண்டிருக்கும் போதே பலதரப்பட்ட அரசு பணிகளுக்கு முயற்சிக்கலாம். அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படித்தால் பணி செய்து கொண்டே படிக்கலாம். சாட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் கல்வி நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி சிஏ வாய்ப்பு பிபிஏ மற்றும் பிபிஎம், பிகாம், பிஏ எக்னாமிக்ஸ், பி.ஏ ஜெர்னலிசம், பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் போன்ற படிப்பினை தேர்வு செய்யலாம்.
5)சட்டத்துறை படிப்புகள்:
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மாணவர்களின் பார்வை சட்டத்துறையின் மீது திரும்பியுள்ளது. ஆனால், அந்த துறையில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது பற்றிய தெளிவான முடிவு எடுப்பதற்கு தடுமாறுகிறார்கள். பெரும்பாலான சட்ட மாணவர்கள் இளநிலை படிப்பை முடித்தாலே பணி வாய்ப்புகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால், அது தவறு. சட்டத்துறையில் முதுநிலை படிப்பு, ஒரு மாணவன் அத்துறையில் விருப்பமான அம்சங்களை புரிந்துகொள்ள உதவுவதுடன் அதில் சிறந்து விளங்கவும் வழிவகை செய்கிறது. சட்ட முதுநிலை படிப்பை முடித்தவர்கள் இளநிலை படிப்பை முடித்தவர்களை விட சிறந்த பணி வாய்ப்புகளை பெறுகின்றனர். குறிப்பிட்ட பிரிவில் ஸ்பெஷலைசேஷன் செய்வது தொடர்பானது முதுநிலை படிப்பு என்பதால் இதை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் நல்ல வரவேற்பு உண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு
05 Jul 2025பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
அஜித்குமார் தாயார், தம்பிக்கு ஆறுதல் தெரிவித்த ஓ.பி.எஸ்.
05 Jul 2025திருப்புவனம் : போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார்.
-
தி.மு.க. கூட்டணிக்குதான் வெற்றி: கனிமொழி எம்.பி.
05 Jul 2025திருநெல்வேலி : வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.