எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வைகோ கூறியிருப்பதாவது:- தங்களுடைய பிள்ளைகளுக்காகவும், கணவன்மார்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் பெண்கள் கொடுத்து இருக்கின்ற விலை, அவர்கள் வடித்து இருக்கின்ற கண்ணீர், சகித்துக் கொண்ட துயரங்கள் கணக்கில் அடங்காதவை. அத்தகைய பெண்கள், அடிமைத்தளையில் இருந்து சமுதாய விடுதலை பெற வேண்டும், உரிமைகளை பெற்று உயர வேண்டும் என்ற விழிப்பு உணர்வை தமிழ் மண்ணில் ஏற்படுத்தினார் தந்தை பெரியார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்றார் பாரதி. பெண்ணடிமை தீரும் மட்டும், பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்திடுதல் முயற்கொம்பே என்றார் பாவேந்தர்.
ஆனால், அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் பெண்களின் உயிருக்கும், கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுகின்ற கொடுஞ்செயல்கள் பெருகி வருவது வேதனை அளிக்கிறது. ஈழத்தில் நம் சொந்த சகோதரிகளை இழிவுபடுத்தி, சின்னஞ்சிறு பெண் குழந்தைகளையும் கொன்று குவித்த கொடுமை நமது நெஞ்சத்தை கீறி ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டது.
காலம் காலமாக கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வருகின்ற கண்ணிய உணர்வால்தான், இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. அன்பின் வடிவங்களான பெண்கள், புரட்சியின் நாற்றங்கால்களாக பொங்கி எழுந்தால் புவியில் புதுமை செழிக்கும். மறுமலர்ச்சி குலுங்கும். மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கின்ற பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்த உயர்வுக்கு வழிவகுக்கும். அதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும்.
உலக மகளிர் நாளில் தாய்மார்களுக்கு மகளிருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


