எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பங்கள் உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பெய்த குறைவான மழையினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் கோடைப்பருவத்தில் தென்னை மரங்களைக் காப்பாற்ற, விவசாயிகள் சில எளிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்கவேண்டும்.
பானைவழிப்பாசனம் : சிறியமரங்களையும், கன்றுகளையும் காப்பாற்ற கன்றிலிருந்து இரண்டடி தூரத்தில் குழி எடுத்து, அக்குழியில் அடிப்பாகத்தில் 3 இடங்களில் துளையிடப்பட்ட பானையை வைத்துவிட வேண்டும். பானையில் 3 துளைகளிலும் மெல்லிய துணியில் அடைக்கபட்டு துணியின் ஒரு பகுதி வெளியே தெரியுமாறு தொங்கவிட வேண்டும். பானையில் நீர் நிரப்பினால் பானையின் துளைகளில் உள்ள துணி வழியே நீர் கசிந்து கன்றுகளுக்கு தொடர்ந்து நீர் அளித்து கன்றுகள் வறட்சியினால் காய்ந்து போகாமல் காப்பாற்றும். ஒருமுறை பானையில் நிரப்பும் நீர் 10-15 தினங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
சொட்டுநீர்; பாசனம் : பெரிய தென்னை மரங்களைக் காப்பாற்ற நுண்ணீர் பாசன அமைப்பான சொட்டு நீர்ப்பாசன முறையே சிறந்தது. கிடைக்கும் குறைந்த அளவு நீரைக்கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்து கூடுதல் பரப்பிலுள்ள தென்னை மரங்களைக் காப்பாற்றலாம். சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க 75மூமுதல் 100மூ வரை மானியம் வழங்கப்படுகிறது.
உரிமட்டைகள் பதித்தல் : தென்னந்தோப்புகளில் நிலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்து மரங்களுக்கு அளிக்கவும், நிலத்திலுள்ள ஈரப்பதம் கடும் வெப்பத்தில் ஆவியாகி வீணாவதை தடுக்கவும் இத்தொழில்நுட்பம் துணைபுரிகிறது. தென்னை மரங்களைச் சுற்றிலும் ஒரு அடி ஆழத்தில் வட்டமாக குழி எடுத்து,குழியினுள் தேங்காய் எடுக்கபட்ட பின்பு வீணாகும் உரிமட்டைகளைப் புதைத்து பின்பு அவற்றை மணலால் மூடிவிட வேண்டும். நாளடைவில் உரிமட்டைகள் மக்கி மண் வளத்தை மேம்படுத்துவதுடன் மண்ணின் நீர் சேமிப்புத் திறனையும் அதிகப்படுத்துகிறது. மணல் சாரியானதோப்புக்கு இத்தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும்.
மூடாக்கு அமைத்தல் : தென்னந்தோப்புகளில் மண்ணின் ஈரப்பதத்தினைக் காப்பாற்ற நிலப்போர்வை என்னும் மூடாக்கு அமைப்பது நல்லது. தென்னை மரங்களின் காய்ந்து கீழே விழுந்த மட்டைகள், அறுவடைக்குப் பின் பயிர்;களிலிருந்து கிடைக்கும் தாவரக்கழிவுகளைக் கொண்டு நில மூடாக்கு அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை கடும் வெப்பத்தால் ஆவியாகி விடாமல் காப்பாற்றுவதன் மூலம் தென்னை மரங்களைவறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.
மட்டைக்கழித்தல் : தென்னை மரங்களில் உள்ள காய்ந்து போன தேவையற்ற மட்டைகளை வெட்டிவிடுவதன் மூலம் மரங்கள் தேவைக்கு அதிகமான நீரை மண்ணிலிருந்து உறிஞ்சி இலைகளின் வழியே வெளியிடும் நீராவிப் போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதன் மூலமும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம்.
பொதுவாக எதிர்வரும் கோடைப் பருவத்தில் தென்னை மரங்களுக்குப் போதுமான சரியான அளவு தண்ணீரைப் பாசனம் செய்து மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்றவேண்டும். சராசரியாக ஒரு நன்கு காய்க்கும் தென்னை மரத்திற்கு ஒரு நாளுக்கு 60-80 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். எனவே, தென்னை மரங்களுக்கு தேவைக்கேற்ப பாசனநீர்; அளிப்பதன் மூலம் மரங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து மரங்களைக் காப்பாற்றலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


