எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரேசிலியா - மத்திய மேற்கு மாகாணமான மாட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் உள்ள சிறையில் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் 5 பேர் பலியானார்கள்.
அடிக்கடி மோதல்
பிரேசில் நாட்டில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கைதிகள் இடையே நடந்த மோதல்களில் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில் அங்கு மத்திய மேற்கு மாகாணமான மாட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் உள்ள சிறையில் நேற்று முன் தினம் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக் கண்ட ஒரு கைதி மாரடைப்பால் உயிரிழந்தார். 17 கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பயன்படுத்திய 2 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். அங்கு அமைதியை நிலைநாட்ட சிறைத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


