எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீவிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி
18 Oct 2025சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 8 பேர் பலி
18 Oct 2025காபூல், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு
18 Oct 2025புதுச்சேரி, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்
18 Oct 2025லண்டன், பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கத்தை அந்த நாட்டு மன்னர் சார்லஸ் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் - ஆப்கான் மோதலை தீர்ப்பது மிக எளிது: அதிபர் ட்ரம்ப்
18 Oct 2025வாஷிங்டன் : பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.