எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
பணிகள் குறித்து ஆய்வு
இக்கூட்டத்தில் கலெக்டர் , கடலூர் மாவட்டத்தில் சிப்காட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளில் குளங்கள் தூர்வாருதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஆகியவை மூலம் அதன் சுற்றுவட்ட கிராமங்களில் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்த விவரத்தினை உரிய அலுவலரிடம் விரைவில் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
பலர் பங்கேற்பு
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், விருத்தாச்சலம் கோட்டாட்சியர் கிருபானந்தம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜய லட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.சங்கர், சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தனியார் சர்க்கரை ஆலையின் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


